Breaking News

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விஷேட கோரிக்கை!

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் தகவல்களை எதிர்வரும் 3 தினங்களுக்குள் புதுப்பித்து, திரட்டி வைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். 

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தேவை ஏற்படின் புலனாய்வு பிரிவிற்கு தகவல்களை வழங்குவதற்கு நிறுவன பிரதானிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தங்களது ஊழியர்களின், பெயர், நிரந்தர மற்றும் தற்காலிக முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் என்பன உள்ளிட்ட விபரங்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

அவசர நிலைமை ஒன்று ஏற்படுமாயின், குறித்த நபர்களை உடனடியாக அடையாளம் காண்பதற்கு இந்தத் தகவல்கள் அவசியமாகும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.