இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு!
இலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது.
இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இருதய நோயாளர் என தெரிவிக்கப்படுகிறது.