Breaking News

மீன் சந்தையில் பணிபுரியும் 46 வியாபாரிகளுக்கு கொரோனா!


பேலியகொட மீன் சந்தையில் 46 மீன் வியாபாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

105 மீன் வியாபாரிகளுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், பேலியாகொடை மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பேலியாகொடை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.