Breaking News

மேலும் 5 காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி


குளியாபிட்டிய காவற்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட குளியாபிட்டிய, நாராம்மல, கிரிஉல்ல, பன்னல மற்றும் தும்மலசூரிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு சென்று வீடு திரும்ப தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தடையாக இருக்காது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.