Breaking News

Vanitha இன்னொரு வாட்டி அப்படி சொன்ன, அவ்ளோ தான்: வனிதாவை எச்சரித்த கஸ்தூரி!


வனிதா விஜயகுமார் தன் காதல் கணவரான பீட்டர் பாலை பிரிந்துவிட்டார். பிறந்தநாளை கொண்டாட கோவாவுக்கு சென்ற இடத்தில் பீட்டர் பாலுக்கும், அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு தகராறு செய்த பீட்டர் பாலை வனிதா அடித்து துவைத்து விரட்டிவிட்டாராம்.

இந்நிலையில் பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதை பார்த்த கஸ்தூரி கூறியிருப்பதாவது,

உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரைவேட்டாக இருக்க வேண்டும் என்றால், அதை பற்றி சமூக வலைதளத்தில் பேசாதீர்கள். டெய்லி அப்டேட் கொடுப்பதுடன் இது போன்று அறிக்கை விடுவது ஏன்?.

அவரை யாரும் மீடியா சர்கஸ் ஆக்கவில்லை. அவர் தான் அப்படி ஒரு சர்கஸை உருவாக்கினார். அவரின் சர்கஸ், அவரின் குரங்குகள். தான் ஒரு ரிங் மாஸ்டர் என்று நினைத்தார். ஆனால் ஜோக்கர் ஆகிவிட்டார்.

இன்னொரு முறை நான் ஆனஸ்டா சொல்றேன், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு நபர் என்கிற வார்த்தைகளை கேட்டேன், அவ்வளவு தான் என்று தெரிவித்துள்ளார்.

வனிதாவுக்கும், கஸ்தூரிக்கும் இடையே ஏற்கனவே பஞ்சாயத்தாக இருக்கிறது. பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராக முன் வந்தார் கஸ்தூரி. மேலும் நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார் கஸ்தூரி. அதை எல்லாம் பார்த்த வனிதா, கஸ்தூரியை விளாசினார். இது ஒன்றும் கோர்ட் ரூம் டிராமா இல்லை, போலி வக்கீல் என்று கஸ்தூரியை கலாய்த்தார் வனிதா.

பதிலுக்கு கஸ்தூரியும் வனிதாவை கிண்டல் செய்தார். ஒரு கட்டத்தில் வனிதா ட்விட்டரில் இருந்து விலகவே, என்ன பயந்துட்டியா குமாரு என்று கலாய்த்தார் கஸ்தூரி. அந்த சண்டை எல்லாம் ஒரு வழியாக ஓய்ந்து இருந்த நேரத்தில் தற்போது இரண்டாவது சுற்று ஆரம்பித்துள்ளது.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை விட ட்விட்டரில் நடக்கும் இது தான் சுவாரஸ்யமாக இருப்பதாக சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.