பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது!
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுநிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே 6 நாட்களுக்கு பின்னர் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.