யாழ்.மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - விபரம் வெளியீடு!
யாழ்.மாவட்டத்தில் வேலணை, உடுவில், நல்லுார் பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி வேலணை - ஊர்காவற்றுறை பகுதியில் 3 பேருக்கும்,
யாழ்.நல்லுார் பகுதியில் ஒருவருக்கும், உடுவில் பகுதியில் தாய், மகளுக்குமாக 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்தவர்கள் என பணிப்பாளர் கூறியுள்ளார்.
மேலும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 3 பேருக்கும் தொற்று மீள உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.
இனங்காணப்பட்டவர்கள்குறித்து யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்
- வேலனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவர். (கொழும்பில் தனியார் உணவகத்தில் தொழில் புரிந்து தற்போது வீட்டுக்கு வந்தவர்கள்)
- யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஒருவர்.( கொழும்பில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். தற்போது யாழ்ப்பாணத்துக்கு வந்தவர்)
- உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவர்.( பேலியகொடை மீன் சந்தையில் கணவர் முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டு இப்போது சிகிச்சை பெற்று வருபவர். )