Breaking News

A/L மாணவர்களுக்கான அறிவித்தல் (மேல் மாகாணம்)

நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு தடையாக அமையாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து மாணவர்களுக்கு ஆக கூடிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் போக்குவரத்து நடவடிக்கைகளை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)