Breaking News

யார் யாரு என்ன செய்றிங்கன்னு எனக்கு தெரியும்: நெத்தியடி அடித்த ஆரி!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஆட்டம், பாட்டம், கூத்து, கொண்டாட்டம் மற்றும் செண்டிமெண்ட் இருந்தாலும் சண்டை சச்சரவு என்பது இல்லாமல் அன்றைய நாள் முடிவதில்லை. 

இன்றைய முதல் புரமோவில் ஆரி, போட்டியாளர்களை அனைவரிடமும், ‘யார் யார் என்ன செய்யறீங்க என்று எனக்கு தெரியும். அதை நான் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என்று நெத்தியில் அடித்தது போல் கூறியது போட்டியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது  

இன்று மோசமான போட்டியாளர்களாக ஆரி மற்றும் அனிதா தேர்வு செய்யப்பட்டனர். இதனை அடுத்து ஆரி பேசிய போது ’நானும் அனிதாவும் மோசமான போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றோம். தேவையில்லாமல் குருப்பிஸம் இருக்க கூடாது என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் ஃபேவரிஸம் என்பது நம்மை மீறி ஒருசில இடத்தில் பண்ணிக்கொண்டு இருக்கிறோம்   

இந்த வீட்டில் யார் என்னென்ன செய்யறீங்க? எங்கங்க என்ன பேசுறீங்கன்னு என்னால பேரை சொல்லி புட்டுபுட்டு வைக்க முடியும் என்று கூற அதற்கு ஆரி, சம்யுக்தா ஆகியோர், ‘இப்பவே சொல்லுங்களேன் என்று கூறுகிறார். அதேபோல் டிப்ளமேட்டிக் என்ற வார்த்தையை பாலாஜி பயன்படுத்த, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ச்சனா டிப்ளமாட்டிக் என்ற ஒரு வார்த்தையை தவறாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கூற, பாலாஜி அவரை முறைக்கிறார். ஏற்கனவே இருவருக்கும் இடையே மோதல் முடிந்து இப்போதுதான் சமாதானம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இருவருக்கும் மோதல் வெடிக்கும் சூழல் வெடித்துள்ளது.  

அதேபோல் ஆரியும் முதல்முறையாக தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஸ்பேஸ் இல்லாமல் இருக்கும் அனிதா, இன்று மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் மீண்டும் அவர் அழுகவோ அல்லது பொங்கவோ வாய்ப்பு உள்ளது. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்