Breaking News

மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்!


பாணந்துறை, வாழைத்தோட்டம் பொது சந்தை தொகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இன்று மதியம் முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பிரதேசத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

பாணந்துறை, வாழைத்தோட்டம் பொது சந்தை தொகுதியில் மீன் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட, பி.சீ.ஆர் பரிசோதனையில் பாணந்துறை வடக்கு, தெற்கு ஆகிய பிரதேசங்களில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.  

இதேவேளை, இரத்தினபுரி பலாபெத்தர பிரதேசத்தின் 09 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  

கிலீமலே, வடக்கு கிலீமலே, தெற்கு கிலீமலே, கெடவல, ஶ்ரீ பலாபத்தல, மல்வல, சிறிபாகம, எம்புல்தெனிய மற்றும் மாதலான ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  

பேலியகொடை மீன் சந்தை தொகுதி தொற்றாளர் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  

குறித்த தொற்றாளர்களுக்கு இடையில் 09 மாத சிசுவொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.