Breaking News

லோஸ்லியாவுக்கும், குடும்ப நண்பரின் மகனுக்கும் கல்யாணமா?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லோஸ்லியா. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கும், கவினுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் இது டிஆர்பிக்காக உருவாக்கப்பட்ட காதல் என்று விமர்சனம் எழுந்தது. 

இன்றைய டீல் மற்றும் தள்ளுபடிகள் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த கையோடு கவினும், லோஸ்லியாவும் பிரிந்துவிட்டார்கள். லோஸ்லியா தற்போது நடிகையாகிவிட்டார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரண்ட்ஷிப் படத்தில் லோஸ்லியா தான் ஹீரோயின். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை.  

மேலும் ஆரியின் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். லோஸ்லியா வசம் தற்போது 3 தமிழ் படங்கள் இருக்கிறது. அவரை தேடி நிறைய பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோஸ்லியாவுக்கு அவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்களாம். திருமணம் செய்து கொள்கிறாயா என்று லோஸ்லியாவிடம் கேட்டதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.  

லோஸ்லியா பெற்றோருக்கு தெரிந்தவர்களின் மகன் கனடாவில் இருக்கிறாராம். அவருக்கும், லோஸ்லியாவுக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டது. இது குறித்து லோஸ்லியா சமூக வலைதளத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை.  

லோஸ்லியாவுக்கு திருமணம் என்கிற தகவல் அறிந்து கவின் ஆதரவாளர்கள் தான் கடுப்பாகிவிட்டனர். என்ன தான் லோஸ்லியா தற்போது கவினுடன் பேசாவிட்டாலும் அவரை தான் திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாக கவின், லோஸ்லியா ஆதரவாளர்கள் கவலை அடைந்தனர்.   

இது குறித்து லோஸ்லியாவின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, இது வெறும் வதந்தி. லோஸ்லியாவுக்கு தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்றார்.  

லோஸ்லியா, கவின் இடையே உருவான காதல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டது இல்லை அது உண்மையான காதல் என்று கவிலியா (கவின்+லோஸ்லியா) ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.