Breaking News

காதல் கண்ணை மறைக்குது: மோதல் வெடிக்கும் நிலையில் பாலாஜி-ரியோ!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தபோது பாலாஜியை ’காதல் கண்ணை மறைக்குது’ என்று கூறியது ஆரி. ஆனால் ஆரி என்று தெரியாத பாலாஜி அனைவரையும் சகட்டுமேனிக்கு கடுமையாகப் பேசி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

இதனை அடுத்து இன்றைய அடுத்த புரமோவில் ரியோ டென்ஷன் ஆகிறார். ‘பாலா சொன்ன வார்த்தையை ரொம்ப தப்பு என்றும் இரண்டு பேர்கள் தான் நாமினேட் செய்து இருக்கின்றார்கள் என்றால் 15 பேர்கள் இருக்கும்போது அதை சொல்ல கூடாது என்று கூறுகிறார். என்னுடைய பேமிலியில் இருக்கின்றவர்களும் உன்னுடைய ஃபேமிலியல் உள்ளவர்களும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசிங்கமாக ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால் அவர்களுக்கு வலிக்காதா? இங்கு வந்திருக்கும் போட்டியாளர்கள் பொடிப்பசங்களோ, ஸ்கூல் பசங்களோ அல்ல விளையாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் பேசி கொண்டு செல்லலாம் என்று கூறுவதற்கு? என்று தனது வாதத்தை வைக்கிறார்.  

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலாஜி கூறியபோது ’காதல் கண்ணை மறைக்குது என்று கூறினால் என்ன அர்த்தம்? கண்ணை மறைக்கும் அளவுக்கா நாங்கள் காதல் பண்ணிகிட்டு சுற்றிக் கொண்டு இருக்கிறோம்? என்றும் எனக்கும்தான் வெளியில நல்ல பெயர் இருக்கிறது, இங்கே வந்து நான் லவ் பண்றதுக்கு வந்திருக்கின்றேன்? எனக்கும் தான் வருத்தமாக உள்ளது, தப்பாயிடும்’ என்று எச்சரிக்கின்றார்.   

மொத்தத்தில் பிக்பாஸ் கொளுத்தி போட்ட சரவெடியால் இன்று பாலாஜி-ரியோ மோதல் வெடிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.