Breaking News

நாட்டில் மற்றுமொரு பொருளுக்கான விலையிலும் அதிகரிப்பு!



இலங்கையில் டயில்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டயில் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சில டயில்களுக்கான விலை 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கருப்பு நிற டயில்களின் விலைகளே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சில டயில் வகைகளுக்கான விலைகள் 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பின் தாக்கத்தை அனைவரும் உணர்கின்ற போதிலும், இவ்வாறான பொருட்களின் விலை அதிகரிப்பு வெளிவருவதில்லை என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.