Breaking News

லண்டனில் தீ விபத்து - இலங்கையை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

 


லண்டனில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றது.

இந்த தீ விபத்தில் தாய், 2 பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.

மற்றும் ஒரு நபர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.