Breaking News

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி தொடரும் போராட்டம்!

 

 
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் (வியாழக்கிழமை) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இன்று காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இன்றைய கையெழுத்து போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், பருத்தித்துறை நகரசபை தலைவர் யோ.இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.அரியகுமர், சட்டத்தரணி திருஞானசம்பந்தர் சந்திரசேகரன், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.