Breaking News

யாழ். தையிட்டி விகாரை ரகசியமாக திறந்துவைப்பு!

 





சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம், தையிட்டி  விகாரை இன்று  அதிகாலை இரகசியமாக முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரைக்கு திஸ்ஸ விகாரை என பெயர் குறிப்பிடப்படுகிறது.

இதையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும் தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.