Breaking News

இலங்கையில் நியாயமான தேர்தல் நடத்தப்படும் - பான் கீ மூன்

இலங்கையில் சமாதானமாக நீதியான தேர்தல் ஒன்று குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தமது மிகுந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.


இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ்சுடன் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மூன், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை என்றும் துணையிருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.அத்துடன்,  சிறுபான்மையினரும் பயமின்றி வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்தார் என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.