Breaking News

வடக்கு - கிழக்கின் வெள்ள அபாயத்தால் அவதியுறும் மக்கள்! உதவிக்கு அவசர அழைப்பு

வடக்கு கிழக்கு பகுதிகளின் எட்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதுடன் முறையான பராமரிப்பின்றி மக்கள் அல்லலுறும் நிலையில் தாயக மக்களுக்கு உதவ முன்வருமாறு அரசியல் தலைவர்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.


வழமையான காலத்தை விட அதிகளவான மழை வீழ்ச்சியால் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதுடன் உணவு உடை இன்னும் பல அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் கூட அவதியுறும் மக்களுக்கு உதவ முன்வருமாறு மக்கள் தன்னார்வ நிறுவனங்களிடம் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தொடர்புகளுக்கு

01.மட்டக்களப்பு மாவட்டம்: பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் 0094 776034559

02.திருகோணமலை மாவட்டம்: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் 0094 775159891

03.அம்பாறை மாவட்டம்: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் 0094 776718697

வடமாகாண தொடர்புகளுக்கு

01. கிளிநொச்சி மாவட்டம்: பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் 0094 776913244

02. மன்னார் மாவட்டம்: வீ.எஸ்.சிவகரன் (செயலாளர் இளைஞர் அணி தமிழரசுக்கட்சி) 0094778355464

03. முல்லைத்தீவு மாவட்டம்: வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் 0094 779598325

04 யாழ் மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா 0094 777373377

05 வவுனியா மாவட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் 0094 710732726