Breaking News

வரவு – செலவுத்திட்டத்தில் விஜயகலா விசனம்!

போரால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்­கில் காணப்படுகின்ற கண­வனை இழந்த பெண்­கள், மற்­றும் முன்­னாள் போரா­ளி­க­ளின் எதிர்­கா­லத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிதி போது­மா­ன­தாக இல்லை. 

இவ்­வாறு சிறு­வர் விவ­கார இரா­ஜங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்  நாடா­ளு­மன்­றத்­தில் வரவு – செல­வுத் திட்­டத்­தின் மீதான இரண்­டாம் நாள் விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில் போரால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் கண­வனை இழந்த பெண்­கள் 90 ஆயி­ரம் பேர் உள்­ள­னர். மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் காணப்படுகின்றார்கள் முன்­னாள் போரா­ளி­கள் தமது வாழ்­வா­தா­ரத்தை தொலைத்­துள்­ள­னர். 

இளை­ஞர்­கள், யுவ­தி­கள் வேலை­வாய்ப்­புக்­களை எதிர்­நோக்குகின்றனர். இவ் விட­யங்­களை நான் தொடர்ச்­சி­யாக அர­சின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்­றேன். வரவு – செல­வுத் திட்­டத்­தில் அவ் யோச­னை­கள் உள்­வாங்­கப்­பட்­டிக்­கின்­ற­மையை இட்டு வர­வேற்­பை­யும் நன்­றி­க­ளை­யும் தெரி­விக்­கின்­றேன். 

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் 165 ஆயி­ரம் வீடு­கள் அமைக்க வேண்­டி­யுள்­ளன. 50 ஆயி­ரம் கல்­வீ­டு­களை அமைப்­ப­தற்­காக 750 மில்­லி­யன் ரூபா முதற்­கட்­ட­மாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 

அடுத்து வரும் இரு வரு­டங்­க­ளில் வீட­மைப்பு நிகழ்ச்­சித் திட்­டத்­துக்­காக 3 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு, கிழக்­கில் உள்ள மாற்­றுத் திற­னா­ளி­கள் 9 ஆயி­ரம் பேருக்கு மாதாந்­தம் மூவா­யி­ரம் ரூபா வழங்க ப்படுவது ஒரு பகு­தி­யி­ன­ருக்கே கிடைக்கின்­றது. 

இம்முறை ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதி­யைப் பயன்­ப­டுத்தி அனை­வ­ருக்­கும் அக் கொடுப்­ப­னவு கிடைப்­ப­தற்கு வழி செய்ய வேண்­டும். பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு வச­தி­ய­ளிப்­ப­தற்­காக 25 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இது போது­மா­ன­தாக இல்லை. 

அதை அதி­க­ரிப்­பது தொடர்­பாக கவ­னம் செலுத்த வேண்­டும். முன்­னாள் போரா­ளி­கள் 12 ஆயி­ரத்து 600பேர் இருக்­கை­யில் 25 மில்­லி­யன் ரூபாவே ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த நிதி போது­மா­ன­தா­க­ இல்லை. 

அவர்­க­ளின் தொழில் தகை­மை­களை மேம்­ப­டுத்தி அதற்­கான வாய்ப்­புக்­களை மேம்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. காண­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு முன்­னெ­டுத்­துச்­செல்­வ­தற்­கான நிதி ஒதுக்­கீ­டும், நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கும் செயற்­பா­டு­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீ­டும் செய்­யப்­பட்­டுள்­ளமை சிறப்­பா­ன­தாக இருக்­கின்ற அதே­நே­ரம் அதனை நடை­மு­றைச் சாத்­தி­ய­மாக்க வேண்­டி­ய தேவையுள்ளது. 

வடக்கு கிழக்கு இளை­ஞர் யுவ­தி­க­ளின் வேலை­வாய்ப்­பைக் கருத்­தில் கொண்டு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து மக்­க­ளின் துய­ரங்­களை துடைப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டுமெனத் தெரிவித்துள்ளார்.