யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகள் ( புகைப்படங்கள்)
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டது.
இன்று காலை பல்கலைக்கழக பிரதான வாயிலில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி வெடிகள் கொழுத்தி கொண்டாடினர்.
கலைப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த வருடத்தினைப் போன்று இந்த வருடமும் தைத்திருநாள் பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்ச்சியாக கொண்டாடப்பட்டுள்ளது.












