Breaking News

மகிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவோம் - வீரவன்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டோடு விடமாட்டேன். அவர் அரசியலை விட்டு இன்னும் விலகவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.


தினேஷ் குனவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும், அனுர பிரியதர்ஷன யாப்பா, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச,

ஜனாதிபதி முக்கியமான விதத்தில் அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறிய சந்தர்ப்பத்தில் நாட்டில் அனேகமானோர் அழுது புரண்டார்கள் நாடு பூராகவும் கண்ணீரால் நிரம்பிக் காணப்பட்டது. அவர் அரசியலுக்கு பிரியாவிடை தரவில்லை, அவரை வீட்டோடு இருப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவிக்கையில்,

100 நாட்களில் தாம் நாட்டிற்கு செய்யவிருக்கும் திட்டத்திற்கும் நாட்டில் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.புதிய முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டதில் சில சிக்கல்கள் காணப்பட்டாலும் அதை குறித்து தற்பொழுது நாங்கள் அவதானம் செலுத்தவில்லை.

100 நாள் வேலைத்திட்டத்தை நாங்கள் தடுக்க மாட்டோம். செய்யவிருக்கும் நல்ல காரியங்களுக்கு எமது முழு ஆதரவையும் வழங்குவோம் என தெரிவித்தார்.