Breaking News

வாக்களிப்பு நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.   ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7மணிக்கு ஆரம்பமாகி சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.


  இதன்படி வடக்கு மாகாணத்தில் காலை முதல் வாக்களிப்பு முடிவடையும் வரை யாழ். மாவட்டத்தில் 61% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.     நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் எடுத்துவரப்பட்டுள்ளது. அதுபோல முல்லை. மாவட்டத்தில் 74.78 % வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 70%வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 66 %வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    எனினும் முழுமையான விபரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.