Breaking News

எனக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துங்கள் - ராஜித கோரிக்கை

எனக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்  என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் மோசடிகள் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் எனக்கு எதிராக ஜயந்த சமரவீரவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முடிந்தளவு விரைவில் விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன். இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளேன். இந்த முறைப்பாடு தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.