Breaking News

ஜெய­ல­லி­தாவை மீண்டும் பதவி இழக்கச் செய்வேன்! சுப்ர­ம­ணியன் சுவாமி சூளுரை

உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்து ஜெய­ல­லி­தாவின் முதல்வர் பத­வியை மீண்டும் இழக்கச் செய்வேன் என்று பா.ஜ.க. மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்­கத்தில் தெரி­வித்­துள்­ள­தா­வது,

ஜெய­ல­லிதா சொத்­துக்­கு­விப்பு தொடர்பில் உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்ய உள்ளேன். எனவே, ஜெய­ல­லிதா முதல்­வ­ரா­னாலும் மீண்டும் தனது பத­வியை அவர் இழக்க வேண்­டி­வரும் என்றார் .