நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தியுள்ளோம் - ஜனாதிபதி
நீதிமன்றம் அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்ட யுகத்திற்கு முடிவு கட்டி நீதிமன்ற சுயாதீனத்தை உயர்ந்த பட்சம் உறுதிப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை போன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக் ஷ மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைகளுக்கு இன்று எதுவித அரசியல் அழுத்தங்களுமின்றி சுயாதீன தீர்ப்புக்கள் இதனாலேயே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அக்குறணை பிரதேச சபையின் புதிய மூன்று மாடி கட்டிட தொகுதியினை நேற் றுக் காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்காக தெளி வான வேலைத்திட்டங்கள் கடந்த சில மாத ங்களுக்குள் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விருப்பு வாக்கு தேர்தல் முறை காரணமாக எமது அரசியல் கலாசாரத்தில் பல்வேறுபட்ட வீழ்ச்சிகள் ஏற்பட்டன. விருப்பு வாக்கு முறைமையில் இருப்பது நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பான அரசியல் நோக்கு அல்ல. கொள்கையன்ற நபர்களை கட்டியெழுப்பக்கூடிய முறையே இருக்கின்றது.
அரசியலில் இருக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு மற்றும் பொதுவான தன்மை விருப்பு வாக்கு தேர்தல் முறையினால் அழிந்து போனது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆரம்பமானது தொடக்கம் அமுலில் இருக்கும் இத்தேர்தல் முறையினை சீர்திருத்தி நாட்டில் அறிஞர் கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களு க்கு அமைய புதிய தேர்தல் முறையினை உருவாக்கும் தேவை இன்று வலுவான முறையில் ஏற்பட்டுள்ளது.
மக்களின் வாக்குப் பலத்தை கெளரவித்து உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்துள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் உரிய நேரத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறு வனங்களுக்கு தாம் விரும்பிய பிரதிநிதி களை நியமிக்கும் உரிமையினை உரிய நேர த்திற்கு நாட்டு மக்களுக்கு வழங்குவது ஜன நாயகத்தைக் கெளரவிக்கும் அரசின் பொறு ப்பாகும் என்றார்.