Breaking News

அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­வ­தாக பிர­தமர் எவ்­வாறு கூற முடியும்? -ராஜித கேள்வி

தகவல் அறியும் சட்­ட­மூ­லமும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோ­வையும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற காலத்­தி­லேயே நிறை­வேற்­றப்­படும். அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­படும் என்று பிர­தமர் எவ்­வாறு கூற முடியும்? என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அமைச்சர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

தகவல் அறியும் சட்­ட­மூ­லமும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோ­வையும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற காலத்­தி­லேயே நிறை­வேற்­றப்­படும். இந்த இரண்டு சட்­ட­ மூ­லங்­களும் தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டன. அவற்றை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து நிறை­வேற்­றுவோம்.

கேள்வி: தகவல் அறியும் சட்­ட­மூ­லமும் மக் கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோ­வையும் அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்றப் படும் என்று பிர­தமர் கூறி­யுள்­ளாரே?

பதில்: அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­படும் என்று பிர­தமர் எவ்­வாறு கூற­மு­டியும்? இவை 100 நாள் வேலைத்­திட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­க­ளாகும். அவற்றை அவ்­வாறு பிற்­போட முடி­யாது. எனவே தகவல் அறியும் சட்­ட­மூ­லமும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோ­வையும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற காலத்­தி­லேயே நிறை­வேற்­றப்­படும். அதில் எந்த சிக்­கலும் இல்லை.

கேள்வி: உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­களை கலைக் கும் தீர்­மா­னத்­துக்கு அமைச்­ச­ர­வையில் சுதந் திரக் கட்சி எதிர்ப்பு வெளி­யி­ட­வில்­லையா?

பதில்: மிகப்­பெ­ரிய விவ­கா­ர­மாக எடுக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி: எதிர்க்­கட்சித் தலைவர் உள்­ளூ­ராட்­சி ­மன்­றங்கள் கலைக்­கப்­ப­டு­வதை எதிர்த்­தி­ருந்­தாரே?

பதில்: அவர் அமைச்­ச­ர­வையில் இல்­லையே.

கேள்வி: தனது கட்­சியின் அமைச்­சர்கள் ஊடாக எதிர்க்கவில்லையா?

பதில்: இல்லை.

கேள்வி: உள்ளூராட்சி மன்றங்களை கலைக் கும் தீர்மானத்துக்கு சுதந்திரக் கட்சி ஏன் எதிர்ப்பு வெளியிடுகின்றது?

பதில்: அவர்களின் அதிகாரத்தில் இருப்ப தால் எதிர்க்கின்றனர் போன்று தெரிகின்றது.