Breaking News

தேர்­தல்­முறை மாற்றம்! களத்தில் ரணில், மைத்­தி­ரி

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி வரைபை தயா­ரிப்­ப­தற்­காக ஜனா­தி பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்தக் குழுவில் அக்­க­றை­யுள்ள அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்­களும் இடம்­பெ­று­வார்கள் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழு­வா­னது எதிர்­வரும் வாரம் முழு­வதும் பேச்சு நடத்தி இறுதி தேர்தல் வபையை தயா­ரித்து அடுத்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சமர்ப்­பிப்­பார்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக தேர்தல் முறை­மாற்ற யோச­னையை கொண்டு வந்தார். அதில் பல விட­யங்கள் உள்­ளன. குறிப்­பாக 225 ஆக உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைன 255 ஆக உயர்த்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த யோசனை எந்­த­வொரு கட்­சி­யி­னதும் கோரிக்­கைக்­காக செய்­யப்­ப­ட­வி்ல்லை. மாறாக சிறு­பான்மை அர­சியல் பிர­தி­நி­தித்­து­ச­வங்­களில் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தொகுதி வாரி­யாக 165 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­யவும் எஞ்­சிய 90 ஆச­னங்­களை மாவட்ட விகி­தா­சார மற்றும் தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இரட்டை ஆச­னங்கள் மற்றும் இரண்டு வாக்குச் சீட்­டுக்கள் போன்ற விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. தொகுதி மட்­டத்தில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் 5 முதல் 10 வீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் மாவட்ட ரீதியில் பெண்­க­ளுக்கு மூன்றில் ஒரு பங்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் தேர்தல் மாற்ற யோச­னையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மிக நீண்­ட­நேரம் ஆரா­யப்­பட்­டது. வாதப் பிர­தி­வா­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. எனினும் சில விட­யங்­களில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­மையின் கார­ண­மாக இழு­பறி நிலை காணப்­பட்­டது. எனவே இறு­தியில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி வரைபை தயா­ரிப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் குழுவை நிய­மிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்தக் குழுவில் அக்­க­றை­யுள்ள அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்­களும் இடம்­பெ­று­வார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழு­வா­னது எதிர்­வரும் வாரம் முழு­வதும் பேச்சு நடத்தி இறுதி தேர்தல் வபையை தயா­ரித்து அடுத்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சமர்ப்­பிப்­பார்கள்.

கேள்வி - தேர்தல் முறையை பாரா­ளு­மன்­றத்தை கலைக்­குமுன் நிறை­வேற்­று­வீர்­களா?

 பதில் - நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றுவோம். 

கேள்வி-  எப்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு வரும்?

பதில் - விரைவில் கொண்­டு­வ­ருவோம். அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்ததும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவோம். அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை பெறப்படும். அதனையடுத்து பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும்.

கேள்வி - அடுத்த தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுமா?

பதில் - நீங்கள் அவசரப்படவேண்டாம். முதலில் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம். அதன் பின்னர் அது குறித்து ஆராய்வோம். நிறைவேற்றுவதே முக்கியமாகும்.