முதலாவது முயற்சியும் இரண்டாவது தோல்வியும்
ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 62 இலட்சத்துக்கும் அதிக மான மக்கள் தமது வரலாற்று சிறப்பு மிக்க நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
அன்றைய தினத்தில் மக்கள் கொண்டிருந்த தீர்மானத்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கும் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கும் அவரை உயரிய ஆசனத்தில் அமரச்செய்வதற்கும் வழி வகை ஏற்படுத்தினர்.
அன்றைய தினத்தில் மக்கள் கொண்டிருந்த தீர்மானத்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கும் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கும் அவரை உயரிய ஆசனத்தில் அமரச்செய்வதற்கும் வழி வகை ஏற்படுத்தினர்.
பொது வேட்பாளராக களமிறங்கிய இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்றைய சுதந்திரக் கட்சியினருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது கூஜாக்களுக்கும் துரோகியாக காணப்பட்டார்.
சுதந்திரக் கட்சியின் அனைத்து பிரசார மேடைகளிலும் மைத்திரிபால சிறிசேன என்ற மனிதர் மீது முட்டை அப்பம் கதை கூறி துரோகி பட்டம் சூட்டி அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருந்தமை வெட்ட வெளிச்சமாகும்.
முதல் நாள் இரவு வேளையில் முட்டை அப்பம் சாப்பிட்டு விட்டு மறுநாளில் முதுகில் குத்தியவர் என்ற வாசகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறும் போது அவரது ஆட்களாக செயற்பட்டு வருபவர்களான மேற்கூறப்பட்டவர்களும் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் மைத்திரியின் முகத்தில் கரியைப் பூசி தேர்தலில் தோல்வியடையச் செய்வதற்கு படாதபாடு பட்டனர்.
அது மாத்திரமன்றி அடாதும் செய்தனர்.
இருப்பினும் பொறுமையின் சிகரமாய் விளங்கிய மைத்திரி நாட்டின் தலைவருக்கே உரிய உயரிய பண்பினை வெளிக்காட்டியவராக தனது பயணத்தை மேற்கொண்டார். அஹிம்சை வழியான அவரது பயணம் நேரானதும் சீரானதுமான பாதையில் அமைந்திருந்ததால் நாட்டு மக்கள் புரிந்து செயற்பட்டனர்.
மறுபுறத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ தமிழ் பேசும் மக்களால் புறக்கணிக்கப்பட்டதால் அவரது வீழ்ச்சி உறுதியானது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒட்டு மொத்த வாக்குகளாலும் தமிழ் பேசும் மக்க ளின் வாக்குகளாலும் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ ஜே.வி.பி. ஆதரவாளர்களாலும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களாலும் வெறுக்கப்பட்டவரானார். இத்தகைய நிராகரிப்பும் வெறுப்பும் இணைந்தே மஹிந்த ராஜபக்ஷ என்ற மனிதரை அதிகாரம் இழக்கச் செய்தன.
இவ்வாறு நாட்டின் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது பதவி மோகத்தையும் பேராசையையும் மூட்டை கட்டி வைப்பதை விடுத்து மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியலுக்குள் அரியாசனத்தை அடையத்துடிக்கின்றார்.
வடக்கு, கிழக்கு மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் முஸ்லிம் மக்கள் என்ற தரப்பினருக்கு மேலாக இந்நாட்டின் சிங்கள சமூகத்தையும் கூட அவர் ஏமாற்றி அரசியல் வயிறு வளர்த்த தலைவர் என்ற நிலைக்கு பிரபலமாகி விட்டார்.
இன்றைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தாருக்கும் ஊழல் குற்றவிசாரணைப் பிரிவினருக்கும் இடையில் மிகப் பெரிய நெருக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த கையோடு விமானத்தில் ஏறிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமறைவாக இருந்த நிலையில் நாடு திரும்பியதும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார்.
இது இவ்வாறிருக்க மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு மாத்திரம் வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர்கள் அளவிலான சொத்துக்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக ஜே.வி.பி. இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளது.
இவ்வாறான குடும்ப பின்னணியைக் கொண்டிருப்பவரான மஹிந்த ராஜபக்ஷ வைத்தான் இந்நாட்டின் பிரதமராக ஆக்கிவிட வேண்டும் என்ற ரீதியில் அடிவருடி அரசியல் செய்யும் சிலர் முனைப்புக் காட்டி வருகின்றனர். மைத்திரியின் வெற்றிக்கு நாட்டு மக்கள் துணை போயிருந்த அதேவேளை மறுபுறத் தில் இனவாத தீயில் குளிக்க விடப்பட்டிருந்த மக்கள் அதிலிருந்து உடனடியாகவே வெளிவர முடியாதவர்களாக இருந்து மஹிந்த ராஜபக் ஷவுக்கும் வாக்களித்தனர்.
அதே போக்கினை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில்தான் மஹிந்த ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்த வரையில் வேட்பு மனு தாக்கல் செய்த நாளின் போது எதிர் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை நேருக்குநேர் சந்தித்த போதும் அதேநேரம் மஹிந்தவே கைலாகு கொடுப்பதற்கு முனைந்த போதும் மைத்திரி அவருக்கு ஒரு கும்பிடு போட்டு நழுவிக்கொண்டார்.
மைத்திரியின் இத்தகைய செயற்பாடானது மஹிந்தவின் கரங்களைத் தொடுவதற்கும் விரும்பாதவராக இருந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. இன்றைய அரசியல் களத்தைப் பொறுத்த வரையில் முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன உள்ளிட்டோர் சிரேஷ்டத்துவத்தைக் கொண்டிருந்தாலும் மஹிந்த இல்லா விட்டால் தாம் அரசியல் அநாதைகள் தான் என்பதை நன்றாகவே ஊகித்துக்கொண்டுள்ளனர்.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத் தின் போது அமைச்சர்களாக வலம் வந்து சுக போகம் அனுபவித்தவர்கள் சம்பளம் - கிம்பளம் என்ற ரீதியில் சம்பாதித்தவர்கள் இன்று காய்ந்து கிடப்பதால் மதம் பிடித்தவர்களாக செயற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ என்ற நபர் அதிகாரத் தில் இருந்த போது ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டது. அனுதினமும் அக்கட்சிக்குள் பூசல்கள் உண்டாகி அவை பூதாகரமாகின. தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டிராத நிலைமையொன்று ஐக்கிய தேசியக் கட்சிக் குள் இருந்து வந்தது.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட் சியை பிளவுபடுத்தி எம்.பி.க்களை வாங்கினார். அதேபோன்று கட்டுக்கோப்புக்கு இலக்கணமாக திகழ்ந்து வந்த ஜே.வி.பி.யை பிளவுபடுத்தி ஒரு பகுதியினரை தனக்கு சாத கமாக்கினார். அத்துடன் நின்று விடாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கூட விட்டு வைக்காதவராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அக் கட்சிகளுக்குள்ளும் பூசல்களை ஏற்படுத்தி பிளவுபடுத்தினார்.
இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் பிளவுபட்டு சீரழிவதற்கு காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது தாய்க்கட்சிக்குள் பூசல்களை ஏற்படுத்துவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதற்கும் பிரதான காரண கர்த்தாவாக விளங்கி விட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்திலிருந்து வெளியேறியது முதல் சுதந்திரக்கட்சி இன்று வரையில் எதிர்நோக்கி வருகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் மஹிந்தவே காரணம்.
அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள் வதிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் சுகபோகம் அனுபவிப்பதிலும் மாத்திரமே குறிகொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவும் அவ ரது கூட்டாளிகளும் சுதந்திரக் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் சின்னா பின்ன மாக்கி வருகின்றனர். இப்படியான நிலையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையிலான சந்திப்பும் ஏற்பட்டது.
மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்த வரையில் அவர் இந்நாட்டின் ஜனாதிபதி, அரச தலைவர், இந்நாட்டு மக்களின் தலைவராக உள்ளவர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமானவர். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அவர் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அது மாத்திரமின்றி சுதந்திரக்கட்சியின் ஆலோசகர் என்ற பதவியை மட்டுமே கொண்டுள் ளார். நிலைமை இவ்வாறிருக்கையில் மைத்திரி,- மஹிந்த சந்திப்பு என்பதும் அவர்கள் இருவருமே உத்தியோகபூர்வ சந்திப்பொன் றில் இணைந்து கொண்டதும் மிகப்பெரிய கேலிக்குரிய விடயமாக உள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமார் ஒன்றரை மணி நேரத்தை செலவிட்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க தேவையில்லை. இது ஒரு அற்பமான விடயமாகவே நோக்கப்படுகிறது. மஹிந்தவின் முதுகில் ஏறி சவாரி செய்வதற்கு சிலர் காத்து நின்று காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். மறுபுறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதால் அக்கட்சி பிளவுபடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார். அதுவே அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மைத்திரி – சந்திரிகா கூட்டினை உடைப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வரும்போது அதில் சுதந்திரக்கட்சியின் வெற்றி குறித்து மைத்திரி வெளியில் கூறா விட்டாலும் மனதுக்குள் இருக்கவே செய்யும். அதேபோன்று தான் மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் மோசடி களை அம்பலப்படுத்துவதாகக்கூறி மக்க ளின் ஆணையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியில் முகம்பார்த்து சிரித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் மஹிந்த ராஜபக்ஷ எனும் நபருக்கு பிரதான இடமொன்றை வகிப்பதிலிருந்து விலகியே இருக்கக்கூடும் என்று சிந்திப்பதிலும் தவறு இருக்காது.
மைத்திரி எனும் நபர் தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் அந்நபர் மண்ணுக்குள்ளேயே இருந்திருப்பார் என்ற கதையை மைத்திரியே பகிரங்க மேடையில் கூறியிருந்தமையை அவர் ஒரு போதும் மறந்திருக்கவே மாட்டார். மறுபுறத்தில் தன்னை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் மைத்திரி மறந்து செயற்பட்டு விட முடியாது. தாம் இருவரும் இணைந்து எவ்வாறு அரசி யல் காய்களை நகர்த்துகிறோம் என்பதை அண்மையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றிலும் ஜனாதிபதி மிக நாசுக் காக கூறியிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரசார மேடைகளில் பேசிய போது மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்ற வார்த்தைக்கு மதிப்பளித்தே ஐக்கிய தேசியக் கட்சியினர் மைத்திரிக்கு வாக்களித்தனர். ஆகவே, ரணிலின் வார்த்தையில் இருக்கும் சக்தியை மைத்திரி நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார். இவ்வாறான நிலையில்தான் நாட்டு மக் கள் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்ததாகவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு வாக்களிக்கவில்லை என்றும் சுதந்திரக் கட்சியினர் கூறுகின்றனர்.
இவ்வாறு கூறுபவர்கள் அன்று மைத்திரிபால சிறிசேனவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து அவரைத் தோற்கடிக்கச் செய்வதற்கும் அதேநேரம் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்கும் செயற்பட்டவர்களாவர். ரணிலை பிரதமராக்க மக்கள் விரும்பியிருக்கா விட்டால் மைத்திரியும் வெற்றி பெற்றிருக்க மாட்டார். இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிமுகமாகிய முதலாவது ஊடக மாநாட்டிலும் அதே நேரம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதாக உறுதியளித்திருந்தார்.
ரணிலை பிரதமராக்க மக்கள் விரும்பியிக்காவிட்டால் மைத்திரியும் வெற்றி பெற்றிருக்க மாட்டார். இதனடிப்படையிலேயே நாட்டு மக்களும் வாக்களித்தனர். ஜனாதிபதி மைத்திரியும் தனது உறுதி மொழியை நிறைவேற்றியுள் ளார். அவரது வாக்குறுதியும் அது நிறைவேற்றப்பட்டதன் தாத்பரியத்தையும் புரிந்திருந்தும் சிங்கள மக்களை மடையர்களாக்கும் செயற்பாட்டினை இன்றைய சுதந்திரக் கட்சியினரும் மஹிந்த ஆதரவாளர்களும் தூக்கிப் பிடித்து பேசி வருகின்றனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வாக்களித்த மக்களினது நிலைப்பாட்டினையும் அதேபோன்று மஹிந்த ஆதரவாளர்களது நிலைப்பாட்டினையும் மிகத்தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார்.
அத்துடன் பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் தெளிவான புரிந்துணர்வொன்றும் நீடித்து வருகின்றது. நாடு பற்றி சிந்திக்கின்ற ஊழல் மோசடிகளை வெறுக்கின்ற அதேபோன்று நாட்டு மக்கள் மீது பற்று கொண்டுள்ள அரச தலைவர்களாக இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் திகழ்கின்றனர். கறை படியாத இவர்கள் அடுத்து வரும் புதிய பாராளுமன்றத்துக்கு நேர்மையானவர்களையும் கற்ற சமூகத்தினரையும் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண் டு வருகின்றனர்.
நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்தும் பொருட்டே மைத்திரி-, ரணில் கூட்டு ஸ்தாபிக்கப்பட்டது. அப்படியானால் நாடு தூய்மைப்படு த்தப்பட வேண்டியுள்ளது. நாடு தூய்மைப்படுத்தப்பட வேண்டுமானால் ஊழல் மோசடிகள் இல்லாதொழிக்கப்படுவதுடன் குற்ற வாளிகள் தப்பிப்பிழைப்பதற்கும் வழிவகுக்காதிருத்தல் வேண்டும். அதன் அடிப்படையிலேயே தற்போதைய நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. நல்லட்சியின் பயணத்தில் நாடு முன்னோ க்கிச் சென்று கொண்டிருக்கின்ற நிலையில் அரசியல் வங்குரோத்து நபர்களால் முட்டுக்கட்டை இடப்படுகின்றது.
இவ்வாறு இந்நாட்டின் ஊழல்வாதிகள், குற்றவாளிகள், ஏமாற்றுக்காரர்கள் அனைத்து தரப்பினரையும் மக்கள் அறிந்துள்ளனர். அதேபோன்றுதான் மஹிந்த ராஜபக் ஷ குடும் பம் தொடர்பிலும் புரிந்து கொண்டுள்ளனர். இருப்பினும் இனவாதமற்ற ஆட்சியொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் மஹிந்த ஆதரவு தரப்பினரால் அது மீண்டும் மீண்டும் முளை விட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தான் நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் நேரத்தை வீணடிக்கும் நிலை யில் மைத்திரி - மஹிந்த சந்திப்பொன்றை ஏற்படுத்தி பித்த லாட்ட அரசியல் ஒன்றும் அரங்கேற்றப்பட்டுள்ளது. மஹிந்தவைப் பொறுத்த வரையில் அவர் இந்நாட்டின் பிரதமராகவும் இரு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்து எல்லாவற்றை யும் அனுபவித்துள்ளார். ஓய்வு பெறும் வயதையும் தாண்டியுள்ள அவர் சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பமளிக்காது மீண்டும் அதிகார ஆசனத்தில் அமர நினைப்பது பேராசையாகும்.
இரண்டு முறை ஜனாதிபதிப் பதவியிலிருந்தும் மூன்றாவது தடவையாகவும் நீடிக்க வேண்டும் என்ற பேராசையிலேயே ஜனாதி பதித் தேர்தலை நடத்தி பதவி முடிவுறும் காலத்துக்கு முன்பதாகவே மஹிந்த ராஜபக்ஷ வீடு சென்றார். மீண்டும் அதே போன்றதொரு பேராசையுடன் பிரதமர் வேட்பாளர் பதவி கேட்டு வந்த அவருக்கு அது நிராகரிக்கப்பட்டமையானது மஹிந்த சந்தித்த இரண்டாவது தோல்வியாகவே அமைந்து விட்டது.
மைத்திரி – மஹிந்தவை இணைத்து ரணிலைத் தோற்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட முத லாவது முயற்சியே இங்கு தோல்வி கண்டுள்ளது. இந்த தோல்விகரமான செயற்பாட்டில் ஜனாதிபதியை இணைத்துக் கொண்டமை யானது தேவையற்ற விடயமாகும். இதேவேளை மறுபுறத்தில் நோக்குவோமா னால் மைத்திரியினதும் ரணிலினதும் கரங்கள் இறுகப்பற்றியிருக்கின்றன என்பதை மஹிந்தவும் மஹிந்த ஆதரவாளர்களும் இன்னுமே புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
இறுதியில் ஜனாதிபதியின் நேரத்தை வீணடித்து மஹிந்தவுக்கு தோல்வியைப் பெற்றுக் கொடுத்திருப்பதுதான் மஹிந்த ஆதரவாளர்களது வெற்றியாகவும் இருக்கிறது. இவ்வாறான நிலையில் தான் நிராகரிக்கப்பட்டவர் பிரதமர் வேட்பாளர் பதவி கேட்பது தொடர்பிலும் அது நிராகரிக்கப் பட்டதாலும் அரசியல் தலைவர்கள் எள்ளி நகையாடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்க முயற்சிப்பதன் மூலம் இந்நாட்டை முன்னைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கே முயற்சிக்கப்படுகிறது.
இலங்கையை பொறுத்த வரையில் இனவாதம் இல்லாவிட்டால் இங்கு அரசியல் செல்வாக்கில்லை என்றதொரு நிலை சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் உள்ளது. அவர்களது அரசியல் பிழைப்புக்கு ஒரே ஆயுதமாகவும் மூலதனமாகவும் இருப்பது இந்த இனவாதம்தான். எனவே, இலங்கை அரசியல் விவகாரம் மற்றும் போக்குகள் தொடர்பில் நாட்டு மக்கள் தெளிவடைந்திருப்பது குறைவாகவே உள்ளது.
அரசியல்வாதிகளின் மூடிமறைப்புக்களும் உண்மைத்தன்மையை அறிய விடாது முட்டுக்கட்டை இடுவதுமே இதற்கான பிரதான காரணமாகும். எப்படியிருப்பினும் மக்கள் தாமாகவே சிந்திக்க முற்படுபவர் களாக இருக்க வேண்டும். தேர்தல் காலங்களில் ஏமாறுபவர்களாக இல்லாது ஏமாற்று க்காரர்களுக்கு பாடம் புகட்டுபவர்களாக மாற வேண்டும்.
-ஜே.ஜி.ஸ்டீபன்
மைத்திரியின் இத்தகைய செயற்பாடானது மஹிந்தவின் கரங்களைத் தொடுவதற்கும் விரும்பாதவராக இருந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. இன்றைய அரசியல் களத்தைப் பொறுத்த வரையில் முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன உள்ளிட்டோர் சிரேஷ்டத்துவத்தைக் கொண்டிருந்தாலும் மஹிந்த இல்லா விட்டால் தாம் அரசியல் அநாதைகள் தான் என்பதை நன்றாகவே ஊகித்துக்கொண்டுள்ளனர்.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத் தின் போது அமைச்சர்களாக வலம் வந்து சுக போகம் அனுபவித்தவர்கள் சம்பளம் - கிம்பளம் என்ற ரீதியில் சம்பாதித்தவர்கள் இன்று காய்ந்து கிடப்பதால் மதம் பிடித்தவர்களாக செயற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ என்ற நபர் அதிகாரத் தில் இருந்த போது ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டது. அனுதினமும் அக்கட்சிக்குள் பூசல்கள் உண்டாகி அவை பூதாகரமாகின. தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டிராத நிலைமையொன்று ஐக்கிய தேசியக் கட்சிக் குள் இருந்து வந்தது.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட் சியை பிளவுபடுத்தி எம்.பி.க்களை வாங்கினார். அதேபோன்று கட்டுக்கோப்புக்கு இலக்கணமாக திகழ்ந்து வந்த ஜே.வி.பி.யை பிளவுபடுத்தி ஒரு பகுதியினரை தனக்கு சாத கமாக்கினார். அத்துடன் நின்று விடாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கூட விட்டு வைக்காதவராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அக் கட்சிகளுக்குள்ளும் பூசல்களை ஏற்படுத்தி பிளவுபடுத்தினார்.
இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் பிளவுபட்டு சீரழிவதற்கு காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது தாய்க்கட்சிக்குள் பூசல்களை ஏற்படுத்துவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதற்கும் பிரதான காரண கர்த்தாவாக விளங்கி விட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்திலிருந்து வெளியேறியது முதல் சுதந்திரக்கட்சி இன்று வரையில் எதிர்நோக்கி வருகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் மஹிந்தவே காரணம்.
அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள் வதிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் சுகபோகம் அனுபவிப்பதிலும் மாத்திரமே குறிகொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவும் அவ ரது கூட்டாளிகளும் சுதந்திரக் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் சின்னா பின்ன மாக்கி வருகின்றனர். இப்படியான நிலையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையிலான சந்திப்பும் ஏற்பட்டது.
மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்த வரையில் அவர் இந்நாட்டின் ஜனாதிபதி, அரச தலைவர், இந்நாட்டு மக்களின் தலைவராக உள்ளவர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமானவர். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அவர் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அது மாத்திரமின்றி சுதந்திரக்கட்சியின் ஆலோசகர் என்ற பதவியை மட்டுமே கொண்டுள் ளார். நிலைமை இவ்வாறிருக்கையில் மைத்திரி,- மஹிந்த சந்திப்பு என்பதும் அவர்கள் இருவருமே உத்தியோகபூர்வ சந்திப்பொன் றில் இணைந்து கொண்டதும் மிகப்பெரிய கேலிக்குரிய விடயமாக உள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமார் ஒன்றரை மணி நேரத்தை செலவிட்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க தேவையில்லை. இது ஒரு அற்பமான விடயமாகவே நோக்கப்படுகிறது. மஹிந்தவின் முதுகில் ஏறி சவாரி செய்வதற்கு சிலர் காத்து நின்று காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். மறுபுறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதால் அக்கட்சி பிளவுபடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார். அதுவே அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மைத்திரி – சந்திரிகா கூட்டினை உடைப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வரும்போது அதில் சுதந்திரக்கட்சியின் வெற்றி குறித்து மைத்திரி வெளியில் கூறா விட்டாலும் மனதுக்குள் இருக்கவே செய்யும். அதேபோன்று தான் மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் மோசடி களை அம்பலப்படுத்துவதாகக்கூறி மக்க ளின் ஆணையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியில் முகம்பார்த்து சிரித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் மஹிந்த ராஜபக்ஷ எனும் நபருக்கு பிரதான இடமொன்றை வகிப்பதிலிருந்து விலகியே இருக்கக்கூடும் என்று சிந்திப்பதிலும் தவறு இருக்காது.
மைத்திரி எனும் நபர் தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் அந்நபர் மண்ணுக்குள்ளேயே இருந்திருப்பார் என்ற கதையை மைத்திரியே பகிரங்க மேடையில் கூறியிருந்தமையை அவர் ஒரு போதும் மறந்திருக்கவே மாட்டார். மறுபுறத்தில் தன்னை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் மைத்திரி மறந்து செயற்பட்டு விட முடியாது. தாம் இருவரும் இணைந்து எவ்வாறு அரசி யல் காய்களை நகர்த்துகிறோம் என்பதை அண்மையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றிலும் ஜனாதிபதி மிக நாசுக் காக கூறியிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரசார மேடைகளில் பேசிய போது மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்ற வார்த்தைக்கு மதிப்பளித்தே ஐக்கிய தேசியக் கட்சியினர் மைத்திரிக்கு வாக்களித்தனர். ஆகவே, ரணிலின் வார்த்தையில் இருக்கும் சக்தியை மைத்திரி நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார். இவ்வாறான நிலையில்தான் நாட்டு மக் கள் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்ததாகவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு வாக்களிக்கவில்லை என்றும் சுதந்திரக் கட்சியினர் கூறுகின்றனர்.
இவ்வாறு கூறுபவர்கள் அன்று மைத்திரிபால சிறிசேனவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து அவரைத் தோற்கடிக்கச் செய்வதற்கும் அதேநேரம் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்கும் செயற்பட்டவர்களாவர். ரணிலை பிரதமராக்க மக்கள் விரும்பியிருக்கா விட்டால் மைத்திரியும் வெற்றி பெற்றிருக்க மாட்டார். இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிமுகமாகிய முதலாவது ஊடக மாநாட்டிலும் அதே நேரம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதாக உறுதியளித்திருந்தார்.
ரணிலை பிரதமராக்க மக்கள் விரும்பியிக்காவிட்டால் மைத்திரியும் வெற்றி பெற்றிருக்க மாட்டார். இதனடிப்படையிலேயே நாட்டு மக்களும் வாக்களித்தனர். ஜனாதிபதி மைத்திரியும் தனது உறுதி மொழியை நிறைவேற்றியுள் ளார். அவரது வாக்குறுதியும் அது நிறைவேற்றப்பட்டதன் தாத்பரியத்தையும் புரிந்திருந்தும் சிங்கள மக்களை மடையர்களாக்கும் செயற்பாட்டினை இன்றைய சுதந்திரக் கட்சியினரும் மஹிந்த ஆதரவாளர்களும் தூக்கிப் பிடித்து பேசி வருகின்றனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வாக்களித்த மக்களினது நிலைப்பாட்டினையும் அதேபோன்று மஹிந்த ஆதரவாளர்களது நிலைப்பாட்டினையும் மிகத்தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார்.
அத்துடன் பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் தெளிவான புரிந்துணர்வொன்றும் நீடித்து வருகின்றது. நாடு பற்றி சிந்திக்கின்ற ஊழல் மோசடிகளை வெறுக்கின்ற அதேபோன்று நாட்டு மக்கள் மீது பற்று கொண்டுள்ள அரச தலைவர்களாக இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் திகழ்கின்றனர். கறை படியாத இவர்கள் அடுத்து வரும் புதிய பாராளுமன்றத்துக்கு நேர்மையானவர்களையும் கற்ற சமூகத்தினரையும் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண் டு வருகின்றனர்.
நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்தும் பொருட்டே மைத்திரி-, ரணில் கூட்டு ஸ்தாபிக்கப்பட்டது. அப்படியானால் நாடு தூய்மைப்படு த்தப்பட வேண்டியுள்ளது. நாடு தூய்மைப்படுத்தப்பட வேண்டுமானால் ஊழல் மோசடிகள் இல்லாதொழிக்கப்படுவதுடன் குற்ற வாளிகள் தப்பிப்பிழைப்பதற்கும் வழிவகுக்காதிருத்தல் வேண்டும். அதன் அடிப்படையிலேயே தற்போதைய நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. நல்லட்சியின் பயணத்தில் நாடு முன்னோ க்கிச் சென்று கொண்டிருக்கின்ற நிலையில் அரசியல் வங்குரோத்து நபர்களால் முட்டுக்கட்டை இடப்படுகின்றது.
இவ்வாறு இந்நாட்டின் ஊழல்வாதிகள், குற்றவாளிகள், ஏமாற்றுக்காரர்கள் அனைத்து தரப்பினரையும் மக்கள் அறிந்துள்ளனர். அதேபோன்றுதான் மஹிந்த ராஜபக் ஷ குடும் பம் தொடர்பிலும் புரிந்து கொண்டுள்ளனர். இருப்பினும் இனவாதமற்ற ஆட்சியொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் மஹிந்த ஆதரவு தரப்பினரால் அது மீண்டும் மீண்டும் முளை விட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தான் நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் நேரத்தை வீணடிக்கும் நிலை யில் மைத்திரி - மஹிந்த சந்திப்பொன்றை ஏற்படுத்தி பித்த லாட்ட அரசியல் ஒன்றும் அரங்கேற்றப்பட்டுள்ளது. மஹிந்தவைப் பொறுத்த வரையில் அவர் இந்நாட்டின் பிரதமராகவும் இரு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்து எல்லாவற்றை யும் அனுபவித்துள்ளார். ஓய்வு பெறும் வயதையும் தாண்டியுள்ள அவர் சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பமளிக்காது மீண்டும் அதிகார ஆசனத்தில் அமர நினைப்பது பேராசையாகும்.
இரண்டு முறை ஜனாதிபதிப் பதவியிலிருந்தும் மூன்றாவது தடவையாகவும் நீடிக்க வேண்டும் என்ற பேராசையிலேயே ஜனாதி பதித் தேர்தலை நடத்தி பதவி முடிவுறும் காலத்துக்கு முன்பதாகவே மஹிந்த ராஜபக்ஷ வீடு சென்றார். மீண்டும் அதே போன்றதொரு பேராசையுடன் பிரதமர் வேட்பாளர் பதவி கேட்டு வந்த அவருக்கு அது நிராகரிக்கப்பட்டமையானது மஹிந்த சந்தித்த இரண்டாவது தோல்வியாகவே அமைந்து விட்டது.
மைத்திரி – மஹிந்தவை இணைத்து ரணிலைத் தோற்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட முத லாவது முயற்சியே இங்கு தோல்வி கண்டுள்ளது. இந்த தோல்விகரமான செயற்பாட்டில் ஜனாதிபதியை இணைத்துக் கொண்டமை யானது தேவையற்ற விடயமாகும். இதேவேளை மறுபுறத்தில் நோக்குவோமா னால் மைத்திரியினதும் ரணிலினதும் கரங்கள் இறுகப்பற்றியிருக்கின்றன என்பதை மஹிந்தவும் மஹிந்த ஆதரவாளர்களும் இன்னுமே புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
இறுதியில் ஜனாதிபதியின் நேரத்தை வீணடித்து மஹிந்தவுக்கு தோல்வியைப் பெற்றுக் கொடுத்திருப்பதுதான் மஹிந்த ஆதரவாளர்களது வெற்றியாகவும் இருக்கிறது. இவ்வாறான நிலையில் தான் நிராகரிக்கப்பட்டவர் பிரதமர் வேட்பாளர் பதவி கேட்பது தொடர்பிலும் அது நிராகரிக்கப் பட்டதாலும் அரசியல் தலைவர்கள் எள்ளி நகையாடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்க முயற்சிப்பதன் மூலம் இந்நாட்டை முன்னைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கே முயற்சிக்கப்படுகிறது.
இலங்கையை பொறுத்த வரையில் இனவாதம் இல்லாவிட்டால் இங்கு அரசியல் செல்வாக்கில்லை என்றதொரு நிலை சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் உள்ளது. அவர்களது அரசியல் பிழைப்புக்கு ஒரே ஆயுதமாகவும் மூலதனமாகவும் இருப்பது இந்த இனவாதம்தான். எனவே, இலங்கை அரசியல் விவகாரம் மற்றும் போக்குகள் தொடர்பில் நாட்டு மக்கள் தெளிவடைந்திருப்பது குறைவாகவே உள்ளது.
அரசியல்வாதிகளின் மூடிமறைப்புக்களும் உண்மைத்தன்மையை அறிய விடாது முட்டுக்கட்டை இடுவதுமே இதற்கான பிரதான காரணமாகும். எப்படியிருப்பினும் மக்கள் தாமாகவே சிந்திக்க முற்படுபவர் களாக இருக்க வேண்டும். தேர்தல் காலங்களில் ஏமாறுபவர்களாக இல்லாது ஏமாற்று க்காரர்களுக்கு பாடம் புகட்டுபவர்களாக மாற வேண்டும்.
-ஜே.ஜி.ஸ்டீபன்