Breaking News

வீடு திரும்­பினார் பஷில் மஹிந்­த­வு­டனும் சந்­திப்பு

விளக்­க­ம­றி­யலில் இருந்­து ­பிணை கிடைத்த பின்னர் கொழும்பு, கொள்­ளுப்­பிட்டி பிர­தே­சத்தின் பிர­பல தனியார் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ நேற்று வீடு திரும்­பினார்.

சிகிச்­சை­களை முடித்­துக்­கொண்டு வீடு திரும்­பிய பஷில் ராஜ­பக் ஷ நேற்று பகல் வேளையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­தித்தார்.

எதிர்க்­கால அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து கலந்­து­ரை­யாடும் முக­மாக இந்த சந்­திப்பு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிலையில் அங்கு என்ன பேசப்­பட்­டது என்­பது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த ஜன­வரி மாதம் ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் நாட்டில் இருந்து அமெ­ரிக்­கா­விற்கு சென்­றி­ருந்த முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் நாட்­டுக்கு வருகை தந்­தி­ருந்தார். நாட்­டுக்கு வந்த அவர் திவி நெகும திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற 3 வெவ்­வேறு நிதி மோச­டிகள் தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு கடு­வலை நீதிவான் நீதி­மன்­றினால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார். 

பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட அவ­ருக்கு பிணை வழங்க கடு­வலை நீதிவான் மறுத்த நிலையில் கொழும்பு மேல் நீதி­மன்றில் பிணை மனு தாக்கல் செய்­யப்­பட்ட நிலையில் அங்கு அவ­ருக்கு பிணை கிடைத்­தது. எனினும் சுக­யீனம் கார­ண­மாக தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லை­யி­லேயே இருந்து வந்த பஷில் ராஜ­பக்ஷ நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கும் அம்­பி­யூலன்ஸ் வண்­டி­யி­லேயே அழைத்துச் செல்­லப்­பட்டார்.

விளக்­க­ம­றி­யலில் இருந்த போது கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் கட்­டணம் அற­வி­டப்­படும் அறை­யொன்றில் இருந்து சிகிச்சைப் பெற்ற பஷில் ராஜ­பக்ஷ பிணைக் கிடைத்த பின்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந் நிலையிலேயே நேற்று அவர் சிகிச்சைகளை முடித்துக்கொன்டு வீடு திரும்பியுள்ளார்.