Breaking News

மஹிந்தவுக்கு கட்சியில் இடமில்லாத போது அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பயனில்லை

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கட்­சியில் இட­மி ல்­லாத போது அவ­ருடன் அர­சி யல் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வதில் எந்த அர்த்­தமும் இல்லை. மஹிந்­த­வுடன் அர­சியல் பேச்­சுவா ர்த்தை நடத்த எந்தத் திட்­டமும் எமக்கு இல்லை என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 

ஆனால் இன்றும் மஹிந்த எனது நல்ல நண்பர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.மஹிந்த ராஜபக் ஷவுடன் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ள­தாக செய்­திகள் கசிந்­துள்ள நிலையில் அதன் உண்­மைத்­தன்மை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கட்­சியில் பிர­தமர் பதவி வழங்­கப்­பட மாட்­டாது என்று நான் குறிப்­பிட்­டது இன்று பொய்­யாக மாறி­விட்­டதா? நான் கூறி­யது பொய் என்றால் இப்­போ­தைக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் மஹிந்த ராஜபக் ஷ பல­மான நிலையில் இருந்­தி­ருக்க வேண்டும். அவரே அடுத்த பிர­தமர் வேட்­பாளர் என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருப்பார். 

ஆனால் நான் அன்று தெரி­வித்த விட­யத்­தையே மறுநாள் ஜனா­தி­பதி ஒரு கூட்­டத்தில் தெரி­வித்­துள்ளார். அதேபோல் கட்சி மட்டக் கூட்­டங்­க­ளிலும் அதே கருத்­தையே அவர் தெரி­வித்­துள்ளார். ஆகவே நான் கூறிய விட­யங்கள் உண்­மை­யா­ன வை என்­பதை இப்­போது அனை­வ­ராலும் விளங்­கிக்­கொள்ள முடியும்.

அதேபோல் கட்சி இன்று ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களை செய்து வரு­கின்­றது. கட்­சிக்குள் பலர் ஜன­நா­யக பாதை­யி னை தெரிவு செய்து அந்தப் பாதை யில் எம்­முடன் கைகோர்த்து நடக்­கின்­றனர். ஆனால் இன்னும் சிலர் கட்­சிக்குள் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி சர்­வா­தி­கா­ரத்தை வலுப்­ப­டுத்த நினைக்­கின்­றனர். 

இப்­போது இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அப்­போது இருந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அல்ல. அந்தக் கட்­சியில் சர்­வா­தி­காரப் பாதை மட்­டுமே திறந்­தி­ருந்­தது. அந்தப் பாதையில் இன்று பய­ணிக்க முடி­யாது. கட்­சியின் தலைவர் பய­ணிக்கும் பாதையில் தொண் ­டர்கள் பய­ணிக்க வேண்டும். கட்­சிக்குள் இரண்டு பய­ணத்தை மேற்­கொள்ள முயன்றால் அது கடி­ன­மா­னது. ஆகவே இப்­போது இருக்கும் நிலை­மையில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வேண்டும்.

கேள்வி:- முன்னாள் ஜனா­தி­ப­தியை நீங்கள் இன்று (நேற்று) காலை சந்­தித்துப் பேசி­ய­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்­ளதே?

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இன்று (நேற்று) காலை நான் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். அந்த பேச்­சு­வார்த்­தையில் எந்­த­வித அர­சியல் நோக்­கங்­களும் இல்லை. இன்றும் மஹிந்த எனது நல்ல நண்­ப­ரா­கவே உள்ளார். மஹிந்த மட்டும் அல்ல அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டனும் நான் இன்றும் நெருங்­கிய பழக்­கத்தை வைத்­துள்ளேன். ஆகவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுடன் சாத­ர­ண­மாக பல விட­யங்­களை கதைத் தேன். அவரது உடல்நிலை மற்றும் உறவினர்கள் பற்றி விசாரித்தேன். அதைத்தவிர வேறு எந்த அரசியல் கலந்துரையாடலும் நடை பெற வில்லை. அரசியலில் சேர்த்துக் கொள்ள விரும்பாத ஒருவருடன் அரசியல் பேசுவதில் அர்த்தம் இல்லை.