Breaking News

அன்று தேவைப்பட்ட பிரபாகரன் இன்று தேவைப் படவில்லையா? சீமான் ஆவேசம்

தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது வாக்­கு­களை பெறு­வ­தற்­காக அ.தி.மு.க.வு.க்கு தேவைப்­பட்ட பிர­பா­கரன் படம், இப்­போது ஆட்­சிக்கு வந்த பின்னர் தேவைப்­ப­ட­வில்­லையா? என்று சீமான் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

நாகை மாவட்டம், வேளாங்­கன்னியை அடுத்த தெற்கு பொய்­கை­நல்­லூரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நிறு­விய விடு­த­லைப்­பு­லிகளின் தலைவர் பிர­பா­க­ரனின் சிலையை பொலிஸார் நேற்று முன்­தினம் இர­வோடு இர­வாக அகற்­றினர். அதே­போல நாம் தமிழர் கட்­சியின் மாநாட்டில் வைக்­கப்­பட்ட பிர­பா­க­ரனின் உரு­வப்­படம் தாங்­கிய பதா­கைகளும் பொலி­ஸா­ரினால் அகற்­றப்­பட்­டன. இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சீமான் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,வாரிசு அர­சியல் பின்­ன­ணியோ, அர­சியல் கட்சிப் பின்­பு­லமோ இல்­லாமல், முதல் தலை­மு­றை­யாக சாதா­ரண ஒரு கிரா­மத்தில் இருந்து வந்த என்னை, பொது­வெ­ளியில் கள­மா­ட­வைத்­தது இலங்கை தமிழ் அர­சி­யல்தான். இலங்­கையில் நடை­பெற்ற படு­கொ­லை­களில் இருந்து பிறந்­த­வர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த்­தே­சிய அர­சி­யலின் தேவையை உணர்ந்து, ‘நாம் தமிழர் கட்­சியை உரு­வாக்­கினோம். சில கால­மா­கவே நாம் தமிழர் கட்­சியின் முதல் மாநாட்­டுக்­கான வேலை­களைத் திட்­ட­மிட்­டுக்­கொண்டு இருந்தோம். மாநாட்­டுக்கு ஏக அர­சுக்­கெ­டு­பி­டிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிர­பா­க­ரனின் படங்­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­னார்கள்.

இதே பிர­பா­க­ரனின் படத்தின் கீழ் நின்று வாக்­குகள் கேட்­ட­போது, அதை வர­வேற்­றது அ.தி.மு.க அரசு. அன்­றைக்குத் தேவைப்­பட்ட பிர­பா­கரன், இன்­றைக்கு ஆட்­சி­யா­ளர்­க­ளுக்குத் தேவைப்­ப­ட­வில்லை. ஆனால் திருச்­சியில் நடை­பெற்ற அம் மாநாட்டில் இலட்சம் இளை­ஞர்கள் திரள, பிர­பா­கரன் என்ற பெரு­நெ­ருப்பே காரணம்.

மேலும், ஈழத்தை வர்த்தகமாக்­கு­வ­தாக எம்மை விமர்­சிக்­கின்ற தி.மு.க உண்­மையில் ஒரு கட்சி அல்ல. ஒரு தொழில்­நி­று­வனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்­பார்கள். வேட்­பாளர் தேர்வு நேர்­கா­ண­லின்­போது, ‘கட்­சிக்கு எவ்­வ­ளவு நிதி கொடுப்பாய்?, தொகு­திக்கு எவ்­வ­ளவு செலவு செய்வாய்?’ என்­றுதான் கேட்­பார்கள். இப்­படி தேர்­தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்­சியைச் சேர்ந்­தவர், அனைத்­தையும் வர்த்தக­மா­கத்­தானே பார்ப்பார். இத்­த­னைக்கும் ஈழத்தை வைத்து வர்த்தகம் செய்­ததே தி.மு.க.தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.