Breaking News

ஐ.தே.க.வின் யோசனை சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அழிக்கும் - சம்­பிக்­க

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்­தல்­முறை மாற்று யோச­னை­யா­னது சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அழித்­து விடும். இதை தெரிந்தே பிர­தமர் தனது யோச­னை­களை முன்­வைத்துள்ளார் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய­லா­ள­ரும் அமைச்சருமா­ன சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

ஜனா­தி­ப­தியின் தேர்தல் முறைமை மாற்று யோசனைத் திட்­டத்தை நிறை­வேற்ற அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஜாதிக ஹெல­உ­று­மய கட்­சியால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வது இந்த நாட்டு மக்­களின் பிர­தான எதிர்­பார்ப்­பாகும். ஆனால் தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வதில் முக்­கிய சில விட­யங்­களை கவ­னத்தில் கொள்ள வேண்டும். குறிப்­பாக தமது ஆச­னத்­துக்­கான பிர­தி­நி­தியை சரி­யாக நிய­மிக்கும் வகையில் சிக்கல் இல்­லாத தேர்தல் கொள்கை அவ­சி­ய­மா­ன­தாக்கும். மற்­ற­யது பல­மான எதிர்க்­கட்சி அமைய வேண்டும். 

அதேபோல் மிக முக்­கி­ய­மா­னது தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வதால் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களை பாதிக்கக் கூடாது. இது­வரை நடை­மு­றையில் இருந்­து­வரும் தேர்தல் முறைமை ஒரு கட்­சிக்­கான சர்­வா­தி­கா­ரத்தை பலப்­ப­டுத்­து­கின்­றது. இதில் எதிர்க்­கட்சி காணாமல் போய்­விட்­டது. அதேபோல் ஏனைய சிறிய கட்­சி­களும் அடக்­கப்­ப­டு­கின்­றன. இது­வ­ரை­யிலும் இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இதுவே நடந்­தது. எனவே தேர்தல் முறை மாற்­றத்தில் முக்­கிய மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இவ்­வா­றான நிலையில் இன்று பிர­தான இரு தரப்­பு­களின் தேர்தல் ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

குறிப்­பாக ஜனா­தி­பதி தலை­மையில் ஒரு தேர்தல் திருத்த யோசனைத் திட்­டமும் பிர­தமர் தரப்பில் ஒரு ஆலோ­சனை திட்­டமும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் ஜனா­தி­ப­தி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது யோச­னையின் படி 255 பேர் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த முடியும். இதில் 196 பேர் விகி­தா­சார தேர்தல் முறை­மை­யிலும் 59 பேர் தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நித்­தித்­து­வப்­ப­டுத்த முடியும். 

பிர­த­மரின் ஆலோ­ச­னை­யின்­படி ஐக்­கிய தேசியக் கட்­சியால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தேர்தல் முறை­மாற்ற யோச­னையில் 125 பேர் தொகு­தி­வாரி முறை­யிலும், 75 பேர் மாவட்ட விகி­தா­சார முறைப்­ப­டியும் ஏனைய 25 பேர் தேசிய பட்­டி­யலில் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த முடியும்.

இவை இரண்­டுமே விகி­தா­சார முறையின் படியே தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றது. இது இரண்டு முறை­மை­யிலும் பிர­தான கட்­சி­க­ளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இதில் மிக முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சினை உள்­ளது. அதா­வது ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் முறைமை மாற்று யோசனை திட்­டத்­துக்கு அமைய நாட்டின் தேர்தல் தொகு­தி­களின் எண்­ணிக்­கையை 125 ஆச­னங்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்த முடி­யுமா? அதேபோல் மாறு­பட்ட கொள்­கை­களை கொண்ட கட்­சி­க­ளுக்கு சரி­யான அங்­கத்­து­வத்தை வழங்­கு­வதை உறு­திப்­ப­டுத்த முடி­யுமா? நாட்டில் 125 தொகு­திகள் தான் இருக்கும் என்றால் ஒரு பிர­தி­நி­திக்­கான வாக்கு எண்­ணிக்கை 1 இலட்­சத்து 24 ஆயி­ர­மாகும். இது ஒவ்­வொரு மாவட்­டத்­துக்கும் மாறு­படும். 

கொழும்பில் இது சாத்­தியம் ஆனால் யாழ்ப்­பா­ணத்­துக்கு இந்த முறைமை முரண்­படும். யாழ்ப்­பா­ணத்தில் மக்­களின் எண்­ணிக்கை குறை­வாகும். ஆகவே வடக்கில் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­வது குறை­வா­கவே அமையும். இதற்கு மக்கள் தயா­ராக இல்லை. வடக்கைப் போல் ஏனைய பகு­தி­க­ளிலும் இந்த சிக்கல் நிலைமை உள்­ளது. வடக்கின் பிர­தி­நி­தித்­து­வத்தை பலப்­ப­டுத்த வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்சிக் தெரி­விக்­கின்­றது. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் முறை­மாற்று யோச­னையில் வட மாகாணம் அதி­க­மாக பாதிக்­கப்­ப­டு­கின்­றது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் யோச­னையில் தமிழ் பிர­தி­நி­தித்­துவம் தடுக்­கப்­படும் என்­பதை தெளி­வாக தெரி­விக்க வேண்டும். இவற்றை மூடி மறைத்து தமது காரி­யங்­களை சாதிக்க ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கின்­றது. வடக்கில் பிர­தி­நி­தித்­துவம் குறைக்­கப்­படும் கொழும்பில் அதி­க­ரிக்கும் என்­பதை வெளிப்­ப­டை­யாக பிர­தமர் தெரி­வித்து அதற்கு கட்­சிகள் இணக்­கத்தை தெரி­வித்தால் அதை நிறை­வேற்ற முடியும். 

ஆனால் தேர்தல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் முறை மாற்று திட்­டத்தில் முறை­மையில் சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள் பாதிக்­கப்­படும் என்­பது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தெரி­யாமல் நடக்கும் வேலைத்­திட்டம் அல்ல. ஐக்­கிய தேசியக் கட்சி தெரிந்தே இந்த முறை­மையை கையாள்­கின்­றது.

அதேபோல் ஜனா­தி­பதி முன்­வைத்­துள்ள முறைப்­படி கலப்பு முறை­மையில் சிறிய மாற்­றங்கள் ஏற்­படும். ஆனால் பெரிய குழப்­பங்கள் எதுவும் ஏற்­ப­டாது. அதேபோல் தேசியப் பட்­டியல் முறை­மையில் அதி­க­ரிப்பு இருக்­கின்­றதால் சிறு­பான்மைக் கட்­சிகள் பாதிக்­கப்­ப­டாது. ஆகவே ஜனா­தி­பதி முன்­வைத்­துள்ள முறைமை மற்­ற­தை­யத்தை விடவும் நல்ல முறை­மை­யாகும். சகல கட்­சி­களும் இதில் பாதிக்­கப்­பட மாட்­டாது. 

ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் முறைமை மாற்று திட்டம் பல­மான எதிர்க்­கட்­சியை உரு­வாக்­காது சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­துவம் மட்­டுப்­ப­டுத்­தப்­படும். ஆகவே இது எமது நாட்­டுக்கு உகந்­தது அல்ல. எனவே ஜனா­தி­ப­தியின் யோச­னையை நிறை­வேற்­ற­வேண்டும். இதை தடுக்க முயற்­சிக்கும் அனை­வரும் தேசத்­து­ரோ­கி­க­ளே­யாவர். அவர்கள் இந்த நாட்டில் நல்­ல­தொரு மாற்­றத்தை கொண்­டு­வரும் சந்­தர்ப்­பத்தை தடுத்­த­வர்­க­ளாக பெயர்­பெ­றுவர். அந்த பெயரை ரணில் பெற்­று­விட வேண்டாம்.

மேலும் பிர­த­ம­ருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையைக் கொண்டுவருவதால் 20 ஆவது திருத்தச் சட்டமே தடுக்கப்படுகின்றது. பிரதமரை மாற்றவேண்டும் என்றால் உடனடியாக பொதுத் தேர்தலுக்கு சென்று மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 

அதை விடுத்து நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்து உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்தால் 20 ஐ நிறைவேற்ற முடியாமல் போய்விடும். அதை செய்ய ஒருசிலர் முயற்சிக்கின்றனர் அதை தடுக்க வேண்டும். எனவே இரு தரப்பிலும் இருக்கும் பிரிவினைவாதிகளின் செயற்பாட்டை தடுத்து 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.