Breaking News

மஹிந்­தவின் காலத்தில் இடம்­பெற்ற அநி­யா­யங்கள் இன்­றைய ஆட்­சியில் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம்

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் நடந்த அநி­யா­யங்கள் இன்­றைய ஆட்­சியில் இடம்­பெற யாருக்கும் இட­ம­ளிக்கப் பட­மாட்­டாது என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரி­வித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் சபைத் தவி­சாளர் சந்­தி­ர­தாஸ கலப்­பதி தலை­மையில் சபை மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

இதன் போது மாகாண சபை உறுப்­பினர் ஆர். துரை­ரட்ணம் முன்­வைத்த பிரே­ரணை தொடர்பில் எதிர்க்­கட்சி உறுப்­பினர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளித்த போதே முத­ல­மைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிழக்கில் இன்று நல்­லாட்சி மலர்ந்­தி­ருக்­கி­றது. இந்­நல்­லாட்­சியில் என்ன நடை­பெ­று­கி­றது? என்ன விட­யங்கள் நடை­பெ­ற­வி­ருக்­கி­ன்றன என்­பன தெளி­வாக அறி­விக்­கப்­பட்டே அனைத்து செயற்பாடுகளும் இடம்­பெறும். கடந்த ஆட்­சியில் நடந்த அநி­யா­யங்கள் இன்­றைய ஆட்­சியில் இடம்­பெற யாருக்கும் இட­ம­ளிக்கப்பட­மாட்­டாது.

இன, ­மத வேறு­பா­டின்றி சகல மக்­க­ளுக்கும் சரி­யான வகையில் சேவைகள் சென்­ற­டைய இன்­றைய கிழக்கின் ஆட்­சியில் இணைந்­தி­ருக்கும் கூட்டு மிகவும் தெளி­வாக இருக்கும். அதற்­காக மிகவும் உன்­னிப்­பாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளத் தீர்­மா­னித்துள்ளோம்.

கடந்த ஆட்­சியில் முத­ல­மைச்­சர்­களும், அமைச்­சர்­களும் செய்த சேவைகள், நட­வ­டிக்­கை­களின் வெளிப்­படைத்தன்­மை­யை இன்­றைய ஆட்­சியின் சேவை­க­ளின்­போது தெளி­வாக மக்­களும் மக்­களின் பிர­தி­நி­தி­களும் விளங்கிக் கொள்ளும் வகையில் அதன் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்றன.

யாரும், யாரையும் ஏமாற்ற முடி­யாது. நிதி­யொ­துக்­கீட்டில் மோசடி நடக்­கி­றது என்று உறுப்­பினர் சந்­தி­ர­காந்தன் கூறு­வதில் சிறிதளவும் உண்­மை­யில்லை. முன்னாள் முத­ல­மைச்­ச­ராக இருந்த போது அரச நிதி, மக்­களின் வரிப்­ப­ணம் வீண்­வி­ரயம் செய்­யப்­பட்­டது போன்று இன்­றைய ஆட்­சியில் இடம்­பெறமாட்­டாது.

அனைத்து செயற்பாடுகளும் சபைக்கும் மக்களுக்கும் சரியான முறையில் அறிவிக்கப்படும். அதன் பின்னர் மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.