Breaking News

யாழில் நடைபெறும் கலாசார பிறழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு துணிச்சலாக செயற்படுங்கள்

யாழ். மாவட்­டத்தில் கட­மை­யாற்றும் அனைத்து கலா­சார உத்­தி­யோ­கத்­தர்களும் சமூகப் பொறுப்­புக்­களை உணர்ந்து குழு­வாகச் செயற்­ப­ட­வேண்­டு­மெனக் கோரி­யுள்ள அரச அதிபர் நா.வேத­நா­யகன் கலா­சாரப் பிறழ்வு­களைத் தடுத்துநிறுத்­து­வ­தற்கு துணிச்­ச­லாகச் செயற்­ப­டு­வது அவ­சியம் எனவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

கலா­சார உத்­தி­யோ­கத்­தர்­க­ளு­ட­னான விசேட சந்­திப்­பொன்று யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எமது மாவட்­டத்தில் பல்­வேறு பிர­தேச செய­ல­கங்கள், திணைக்­க­ளங்­களின் கீழ் கலா­சார உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக நீங்கள் செயற்­பட்டு வரு­கின்­றீர்கள். நீங்கள் அனை­வரும் உங்­க­ளது கட­மை­களை உணர்ந்து செயற்­ப­ட­வேண்டும்.

உங்­க­ளுக்­கென சமூகப் பொறுப்பு காணப்­படு­கின்­றது. அதனைக் கருத்­திற்­கொண்டு செயற்­ப­டு­வது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். மத்­திய அர­சாங்கம், மாகாண அர­சாங்கம் என்ற பேதங்­களை கருத்­தி­லெ­டுக்கக் கூடாது.

கலா­சா­ரத்தைப் பொறுத்­த­வரை வரை­ய­றை­யொன்று கிடை­யாது. எனினும், எமது பண்­பாட்டு ரீதி­யான கலா­சா­ரத்தை பாது­காத்து வலு­வூட்ட வேண்­டிய கடப்­பாடு எம் அனை­வ­ருக்கும் உள்­ளது. இதற்­காக நாம் எப்­பா­கத்­திற்கும் சென்று கட­மை­யாற்ற பின்­நிற்­கக்­கூ­டாது.

யாழ். மாவட்­டத்­தினைப் பொறுத்­த­வரையில் தற்­போது கலா­சாரப் பிறழ்­வுகள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன. இதனைத் தொடர்­வ­தற்கு அனு­ம­திக்­க­மு­டி­யாது. இவற்றைத் தடுத்துநிறுத்த உரிய விழிப்­பு­ணர்­வு­க­ளையும் கண்­கா­ணிப்­புக்­க­ளையும் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­வது அவ­சி­ய­மா­ன­தாகும். அதற்­காக பிர­தேச ரீதி­யா­க­வுள்ள பொது அமைப்­புக்கள், கலா­சார மையங்கள் ஊடாக விழிப்­பு­ணர்­வு­களை மேற்­கொள்­வ­தற்கு அக்­க­றை­யுடன் செயற்­ப­ட­வேண்டும்.

இந்த விசேட கலந்­து­ரை­யா­டலில் வட­மா­காண கல்வி, பண்­பாட்­ட­லு­வல்கள் அமைச்சின் உதவிப் பணிப்­பாளர் திரு­மதி செல்­லத்­துரை வனஜா, மாவட்ட, பிர­தேச கலா­சார உத்­தி­யோ­கத்­தர்கள் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் பலர் கலந்துகொண்­டி­ருந்­தனர்.

முன்­ன­தாக புங்­கு­டு­தீவில் இடம்­பெற்ற பாட­சாலை மாணவி மீதான கூட்டு வன்­பு­ணர்­வை­ய­டுத்து யாழ்.மாவட்டம் மற்றும் அதனை அண்டிய ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் சட்டவிரோத செயற்பாடு களையும் கலாசார முரண்பாட்டு விட-யங்க-ளையும் கட்டுப்படுத்துவதற்கு பல்வே-றுபட்ட செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்-பிடத்தக்கது.