Breaking News

மஹிந்­தவின் தலை­மையில் ஆட்சியை கைப்­பற்­று­வோம்

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எதிர்த்து நிற்­கக்­கூ­டிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வே­யாவார். அவரின் தலை­மையில் மீண்டும் ஆட்­சியை கைப்­பற்­றுவோம் என மஹிந்த ஆத­ரவுக் கூட்­டணி தெரி­வித்­தது.


சர்­வ­தேச சூழ்ச்­சியே மஹிந்த ஆட்­சியை தகர்த்­தது. மக்கள் இதை உணர்ந்து மீண்டும் எமக்கு அதி­கா­ரத்தை வழங்க வேண் டும் எனவும் அக் கூட்­டணி வலி­யு­றுத்­தி­ய­து.

அபேய­ராம விகா­ரையில் மஹிந்த ஆத­ரவுக்கூட்­ட­ணியால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­ட­து.

இங்கு கருத்து தெரி­வித்த முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறு­கையில்,


மஹிந்த அலை நாளுக்கு நாள் பெரு­கிக்­கொண்டே செல்­கின்­றது. கண்கள் இருக்கும் அனை­வ­ருக்கும் இதை நன்­றாக அவ­தா­னிக்க முடியும். இதை அர­சாங்­கமும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

மஹிந்த கூட்­ட­ணியின் பக்கம் மக்கள் பலம் அதி­க­ரிப்­பதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். ஆனால் தொடர்ந்தும் ஆட்­சியை தக்­க­வைத்துக் கொள்ள முடியும் என்ற பிர­தமர் கனவை காண்­கின்றார். நுகே­கொ­டையில் ஆரம்­ப­மா­கிய மஹிந்த அலை இன்று மாத்­த­றையில் பேர­லை­யாக உரு­வா­கி­யுள்­ளது. மாத்­த­றையில் முக்­கிய அறி­கு­றிகள் தென்­பட்­டுள்­ளன. இது­வ­ரையில் எந்­த­வொரு கூட்­டத்­திலும் கலந்­து­கொள்­ளாத மஹிந்த ராஜபக் ஷ மாத்­தறைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டுள்ளார். அவர் தலை­மையில் தான் அடுத்த கூட்டம் நடை­பெறும் என்­ப­தற்கு இது நல்­ல­தொரு அடை­யா­ள­மாகும்.

மேலும் இந்த அர­சாங்கம் தமது சர்­வா­தி­கா­ரத்தை முழு­மை­யாக பயன்­ப­டுத்­து­கின்­றது. பிர­த­ம­ருக்கு எதி­ராக 100 க்கும் அதி­க­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்டு சபா­நா­ய­க­ரிடம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை கைய­ளித்தும் அது தடுக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ரவு இல்­லாது ஆட்சி நடத்தும் முதல் அர­சாங்கம் இது­வே­யாகும். இன்று நாட்டின் அபி­வி­ருத்­திகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. மக்­களின் வாழ்­வா­தார பிரச்­சினை அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது. மக்­களின் ஆத­ரவு இல்­லாது ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்தி வரு­கின்­றது. மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் கடந்த ஆண்டில் முழு­மை­யாக பெற்ற வெளி­நாட்டு கடன்­தொகை 259.8 பில்­லியன் ரூபாய் ஆகும். ஆனால் இந்த அர­சாங்கம் தனது ஆட்­சியில் இந்த ஐந்து மாதத்தில் மாத்­திரம் 378.3 பில்­லியன் ரூபாய் தொகையை வெளி­நாட்டு கட­னாக பெற்­றுள்­ளது. இவ்­வாறு கடன் பெற்றால் நாட்டின் நிலைமை என்­ன­வாகும்.

நாட்டில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் முழு­மை­யாக அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. சுயா­தீன சேவைகள் தடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பொலிஸ் சேவை முழு­மை­யாக அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டில் வந்­து­விட்­டது. அர­சாங்­கத்தின் தேவைக்கு ஏற்­பவே நாட்டில் சுயாதீன சேவைகள் கையா­ளப்­ப­டு­கின்­றன. தமக்கு எதி­ரான அர­சியல் வாதி­களை கைது செய்­வ­தையும் அச்­சு­றுத்­து­வ­தையும் தான் இந்த அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

பந்­துல குண­வர்­தன

இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த முன்னாள் அமைச்சர் பந்­துல குண­வர்த்­தன கருத்து தெரி­விக்­கையில்,

மஹிந்த ராஜபக் ஷவுடன் நாம் கைகோர்த்து மீண்டும் ஆட்­சியை கைப்­பற்ற வேண்­டு­மென கூறு­வது ஏனென்றால் இன்று நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் அதி­கார மோச­டிகள் மற்றும் அரச சேவையில் ஏற்­பட்­டி­ருக்கும் மோச­டி­களை மீண்டும் கட்­டுப்­ப­டுத்த வேண்டும்.

மக்­களின் பொரு­ள­தார, கல்வித் துறையில் ஏற்­பட்­டி­ருக்கும் மோச­டி­களை தடுக்­க­வேண்­டு­மாயின் மீண்டும் நல்­லாட்­சியை கொண்­டு­வர வேண்டும். இலங்கை வர­லாற்றில் மாபெரும் மக்கள் புரட்­சியில் தான் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­ந­யாக அர­சியல் பிர­வே­சத்தை ஆரம்­பித்தார். அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஆட்­சி­ய­மைத்­த­மையும் மிகப்­பெ­ரிய மக்கள் புரட்­சியால் தான். யாரும் எதிர்­பா­ராத நிலையில் மக்­களின் ஆத­ர­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியை உரு­வா­கினார். அதன் பின்னர் மக்கள் அலை­யொன்று ஒரு சந்­தர்ப்­பத்­திலும் உரு­வா­க­வில்லை.

1994 ஆம் ஆண்டு சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவும் அவ்­வா­றான புரட்­சியை செய்­தி­ருந்­தாலும் அதன் பின்னர் அவ்­வா­றான மக்கள் அலை­யொன்று உரு­வா­க­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­யிலும் மக்கள் அணி­யொன்று உரு­வா­க­வில்லை. ஆனால் 2015 இல் மீண்டும் மக்கள் புரட்­சி­யொன்று ஆரம்­பித்­துள்­ளது. இந்த மக்கள் அலை­யினை யாராலும் தடுக்க முடி­யாது. இந்த மக்கள் அலை உரு­வாகக் காரணம் என்­ன­வென்றால் இந்த நாட்டில் கடந்த ஆறு மத காலத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் மக்­களின் வாழ்­வா­தார சிக்­கல்­களும் சர்­வ­தி­கார ஆட்­சி­யுமேயாகும். எனவே நாட்டில் அடி­மட்ட மக்கள் புரட்சி ஒன்று ஏற்­பட்­டி­ருப்­பதன் கார­ணத்­தினால் தான் இவ்­வா­றான சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

எனவே நாம் மஹிந்த ராஜபக் ஷவுடன் கைகோர்த்து வெகு விரைவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தை விரட்­டி­ய­டிப்போம். அதன்­பின்னர் அமைச்­ச­ர­வை­யுடன் கூடிய பாரா­ளு­மன்­றத்தை நாம் அமைப்­பதே எமது குறிக்­கோ­ளாகும். ரணிலை விரட்­டி­ய­டிக்கும் போராட்­டத்தை நாம் ஆரம்­பித்­துள்ளோம். இந்தப் போராட்­டத்­துக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் இரண்டு அமைச்­சர்கள் உத­வு­கின்­றனர். நிதி அமைச்சர் ஊழல்­களை செய்தும் கல்வி அமைச்சர் மாண­வர்­களின் கல்­வியை பாழாக்­கியும் இந்த நாட்டு மக்­க­ளிடம் மீண்டும் மஹிந்­தவின் தேவை­யினை எடுத்துக் காட்­டு­கின்­றனர்.

அதேபோல் ரணிலை எதிர்த்து நிற்­கக்­கூ­டிய தலைவர் மஹிந்த மட்­டு­மே­யாவார். இம்­முறை மகிந்­தவே ரணிலை எதிர்த்து பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­குவார்.

கேள்வி :- இந்த மக்கள் அலை தானே கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்­தவை வீழ்த்­தி­யது?

பதில் :- இந்த தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தியது மக்கள் அலை அல்ல. சர்வதே சூழ்ச்சியும் நாட்டுக்கு எதிரான முரண்பாட்டு சக்திகளுமே மஹிந்த ஆட்சியை வீழ்த்தியது. இந்த சூழ்ச்சியை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்திரா காந்தி, சேர்ச்சில் ஆகியோரும் ஆட்சியில் இருந்து மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் குறுகிய காலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். மகிந்தவும் அந்த வரிசையில் தான் உள்ளார். அவரும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்.