Breaking News

மஹிந்­தவின் இன­வா­தமும் புலிக்­க­தையும் இனி எடு­ப­டாது! ரவி கரு­ணா­நா­யக்க கூறு­கின்றார்

மஹிந்த ராஜபக்ஷவி­னு­டைய சர்­வா­தி­கா ரப் போக்­கு­டைய ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து, நாட்டில் ஜன­நா­ய­க­மிக்க நல்லாட்­சியை ஏற்­ப­டுத்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி ­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்கவும் இன்று மக்கள் மத்­தியில் பேர­பி­மா­னத்தைப் பெற்­றுள்­ளனர்.

அதனைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யாத மஹிந்த ராஜபக் ஷ இன­வா­தத்தை கட்­ட­விழ்த்து விட்டு, ஊழல் மிக்க ஆட்­சியை மீண்டும் ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்றார்.

அவ­ரது கனவு ஒரு­போதும் பலிக்­காது. அதே­வேளை இந்த தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவி­னு­டைய அர­சி­யலில் இறுதி அத்­தி­யாயம் எழு­தப்­படும் என நிதி­ய­மைச்­சரும் கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ள­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

மஹிந்­தவின் இன­வாத பேச்சும் புலிக்­க­தையும் இனி மக்கள் மத்­தியில் எடு­பட போவ­தில்லை. தெஹி­வளை மிருகக் காட்­சி­சா­லையில் மாத்­தி­ரமே இன்று புலிகள் இருப்­பதை மக்கள் நன்­க­றி­வார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பிர­பா­க­ரனின் தேவையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிறை­வேற்­று­கிறார் என்று அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெற்ற கூட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­நாகல் மாவட்ட வேட்­பா­ள­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ குறிப்­பிட்­டி­ருந்தார். அது குறித்து வின­வி­ய­போதே நிதி­ய­மைச்சர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் என அனைத்­துப்­பி­ரி­வி­ன­ராலும் தொற்­க­டிக்­கப்­பட்­டரே மஹிந்த ராஜபக் ஷ இன்று அவர் மக்கள் மத்­தியில் வந்து சிறிதும் வெட்­க­மில்­லாமல் மீண்டும் சாக்கு கேட்­கிறார்.

எமது நல்­லாட்­சியில் நாம் நாட்டு மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளோம். வௌ்ளை வேன் கலா­சா­ரத்தை நிறுத்தி மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம். இந்த சூழலை மாற்­றி­ய­மைக்க மஹிந்­த­வுடன் இணைந்து சிலர் முயன்­று­வ­ரு­வ­தையும் அதற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால எந்த வகை­யிலும் உடந்தை இல்லை என்­ப­தையும் கடந்­த­வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவின் விசேட உரையில் நாட்டு மக்கள் அறிந்து கொண்­டார்கள்.

மைத்­த­ரி­பால சிறி­சேன மீதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதும் மக்கள் நம்­பிக்கை கொண்­டுள்­ளார்கள். ஆகை­யி­னா­லேயே இன­வா­தத்தை பரப்பி எம்­மீது சேறு பூசும் முயற்­சியில் மஹிந்த ராஜபக் ஷ இறங்­கி­யுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் நாடும் நாட்டு மக்­களும் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­க­ளையும் சவால்­க­ளையும் சாதா­ரண வார்த்­தை­களால் சொல்­லி­விட முடி­யாது. எங்கும் ஊழல் மோசடி சுதந்­தி­ர­மாக வாய்­தி­ரக்க முடி­யாத நிலை இப்­படி சொல்லிக் கொண்டே போகலாம்.இவற்றை இல்­லா­தொ­ழிக்­கவே கட்சி, இனம், மதம் என்ற எந்த வேற­பா­டு­மின்றி மக்கள் ஒன்­றி­ணைந்­தனர். அவ்­வாறு ஒன்­றி­ணைந்து பெற்­றுக்­கொண்ட வெற்­றியை பாது­காப்­ப­தற்­கா­கவே மீண்டும் நாம் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்ளோம்.

மஹிந்த ராஜபக் ஷ தனது குடும்­பத்தை போசிக்கும் செயற்­பா­டு­களை சிறப்­பாக முன்­னெ­டுத்தார். எங்கு பார்த்­தாலும் ராஜபக் ஷவி­னரே கடந்த காலத்தில் காணப்­பட்­டார்கள். என்ன வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்­தாலும் அவர்­களின் சட்டைப் பைக­ளுக்கே நாடு பணம் செல்ல வேண்டும் என்­பதை அப்­போது நிய­தி­யாக காணப்­பட்­டது. ஆனால் அந்த யுகம் இன்று முற்றாக மாற்றமடைந்துள்ளது.

தமது குடும்பத்தாருக்காகவும் ஊழல் மிக்க சகாக்களை பாதுகாப்பதற்காகவுமே மீண்டும் மஹிந்த போட்டியிடுகின்றார். இவர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவே மஹிந்தவின் இறுதி அத்தியாயம் இந்த தேர்தலில் ஊர்ஜிதப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.