Breaking News

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு நியமனம்

காணாமற்போனவர்கள் தொடர்பான விசார ணைகளை மேற்கொள்வதற்கு, ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப் பட்டுள்ளதாக, காணாமற்போனவர்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

காணாமற்போனவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள், ஆணைக்குழுவின் அமர்வுகளில் வாய்மூலம் அளித்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே, மூத்த அனுபவம்மிக்க அதிகாரிகளைக் கொண்ட இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட, மேலதிகமாக ஆழமாக விசாரிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் தொடர்பாகவே, இந்த விசாரணைக்குழு விசாரிக்கவுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிச் சேவை அதிகாரி இந்த விசாரணைகளை மேற்பார்வை செய்வார் என்றும், காணாமற்போனவர்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் செயலர் தெரிவித்துள்ளார்.