Breaking News

பிரித்தானியா முன்னாள் பிரதமர் இலங்கை வருகிறார்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொணி பிளேயர் அவரது குடும்பத்தினருடன் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வரும் ரொணி பிளேயர் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.அத்துடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 10ஆவது சிரார்த்த தின நிகழ்விலும் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றவுள்ளார்.