Breaking News

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் விடுதலை

கடந்த 2010 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தலவாக்கலை நகரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை நிரபராதி என நிரூபிக்கப்பட்டு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டார்.

2010ம் ஆண்டு பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர் என தலவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த தாளமுத்து சுகாதாரன் என்பவர் கைது செய்யப்பட்டு, 2014 ஆம் ஆண்டு அவர் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளிலோ வேறு எந்த விதமான குற்றங்களிலோ ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் அவருக்கெதிரான வழக்கு கடந்த புதன்கிழமை நுவரேலியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.லலித் ஏக்கநாயக்காவினால் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அவர் நிரபராதியென தீர்ப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.