Breaking News

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று கொக்குவில் நடைபெற்றது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் யாழ்.கொக்குவில் மேற்கு பாரதி சனசமூக திடலில் நடைபெற்றது.

பெரும் தொகையான மக்கள் ஒன்று கூடி தமிழ் தேசியக் மக்கள் முன்னணியினருக்கு வரவேற்பளித்திருந்ததுடன், பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகளையும் பொது மக்களே பொறுப்பெழுத்து ஒழுங்கு செய்திருந்தனர்.

இப் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், பத்மினி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணி வி.திருக்குமரன், ஆசிரியர் இலங்கோ ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.