தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் - பிரதமர்
அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினது சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் அனைத்து தரப்பினரதும் பொருளாதரார மட்டத்தை உயர்வடையச் செய்வற்கு எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.