Breaking News

ராஜபக்ஷ கூட்டம் இனவாதத்தை பரப்பி வெற்றிபெற முயற்சி! அநுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட ராஜபக்ஷவும் அவ­ரது கூட்­டமும் நாட்டில் இன­வா­தத்தை ஊக்­கு­வித்து தேர்­தலில் வெற்­றி ­பெற முயற்­சிக்­கின்­றது. எனவே பொது­மக்கள் இந்த இன­வாதப் பொறியில் சிக்­கி­வி­டக்­க­கூ­டாது என்று ஜே.வி.பி தலைவர் அநு­ர குமார ­தி­ஸா­நா­யக்க தெரிவித்தார்.

வெற்­றி­லைக்கு புள்­ள­டி­யி­டு­வதன் மூலம் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கும் திரு­டர்­க­ளுக்கும் எதி­ராக விசா­ர­ணை­களை நடத்த வேண் டாம் தண்­டனை விதிக்க வேண்டாம் என்­பதே அர்த்­த­மாகும் என்று அவர் தெரி­வித்தார்.

மொறட்­டு­வையில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே ஜே.வி.பி தலைவர் அநு­ர­குமார தி­ஸா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இத் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­காக மஹிந்த ராஜபக் ஷவிடம் மக்­க­ளுக்கு தெரி­விப்­ப­தற்கு எதுவும் கிடை­யாது.எனவே மஹிந்­தவும் அவ­ரது கூட்­டமும் நாட்­டுக்குள் இன­வாதப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றன. இந்தப் பொறியில் மக்கள் சிக்­கி­வி­டக்­கூ­டாது.

45 வரு­டங்­க­ளுக்கு முன்பு இளம் வயதில் ராஜபக்ஷ 1970இல் அர­சி­ய­லுக்கு வந்து அமைச்­ச­ரானார். பின்னர் பிர­த­ம­ரானார், எதிர்க் கட்சித் தலை­வரானார், ஜனா­தி­ப­தி­யானார். இன்று மீண்டும் எம்.பி.யாக முயற்­சிக்­கின்றார். இன்று “தாத்தா” வயதில் மீண்டும் எம்.பி.யாக முயற்­சிக்­கின்றார். எமது நாட்டின் வளங்­களை, நிதியை கொள்­ளை­ய­டித்­தது தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விசா­ர­ணை­களின் இறு­தியில் மஹிந்­தவே சிக்­குவார். என­வேதான் அர­சி­ய­லுக்கு வர முயற்­சிக்­கின்றார்.

மஹிந்­தவின் தில்லு முல்­லு­களை வெளி­யிட்­டதால் எனக்­கெ­தி­ராக நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­போ­கிறார். நானும் தயா­ராக இருக்­கின்றேன். இவர் செய்த மோச­டிகள் தொடர்­பாக சாட்­சி­யங்­க­ளுடன் இலஞ்ச ஊழல் திணைக்­க­ளத்தில் முறைப்­பாடு செய்துள்ளோம்.

அதனை நீதி­மன்­றத்­திற்கு வெளி­யி­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைப்­பது நல்­ல­தாகும். நீங்கள் வெற்­றி­லைக்கு புள்­ள­டி­யி­டு­வதன் மூலம் ஊழல் மோச­டிக்­கா­ரர்கள் திரு­டர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டாம். தண்­டனை வழங்க வேண்டாம் என்றே அர்த்­தப்­படும்.

வெற்­றி­லைக்கு இல்­லா­விட்டால் எதற்கு கொடுப்­பது ரணிலுக்கா அதனையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் ரணில் தான் தனது ஆட்சிக்காலத்தில் அரச சொத்துக்களை தனியார் மயமாக்கினார். எனவே இம் முறை உங்கள் வாக்குகளை ஜே.வி.பிக்கு வழங்குங்கள் என்றார்.