Breaking News

உள்ளக விசாரணையை வடமாகாண சபையிடம் வழங்க திட்டம்– ஐ.ம.சு.மு.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எமது கைகளில் உள்­ளது. மஹிந்த –மைத்­திரி ஆட்­சியில் ஆறு­மாத காலத்­துக்குள் இனப்­பி­ரச்சினைக்­கான தீர்வை பெற்­றுத்­த­ருவோம். 

ஆனால் வடக்கு கிழக்கை இணைப்­பது ஒரு­போதும் சாத்­தி­ய­மற்­றது. அதேபோல் 13க்கு உள்ளே தீர்வை காண்­பதே எமது நிலைப்­பா­டாகும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தெரி­வித்­தது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்றுஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே கட்­சியின் உறுப்­பினர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியில் அறு­பது மாதங்­களில் புதிய அர­சாங்கம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­விப்­பது உண்­மை­யே­யாகும். ஏனெனில் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­டணி இந்த நாட்டில் ஆட்­சியை கைப்­பற்­றிய காலப்­ப­கு­தியில் இந்த நாட்டின் நிலைமை மிகவும் அச்­சு­றுத்­த­லான நிலையில் தான் இருந்­தது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் பிர­பா­கரன் ஆகியோர் ஒன்­றி­ணைந்து நாட்டில் பிரி­வி­னைக்­கான அடித்­த­ளத்தை பல­மாக அமைத்­தி­ருந்­தனர். 

வடக்கு,கிழக்கு இணைந்த தமி­ழீ­ழத்தை அமைக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­தனர். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டின் தலை­மைப்­பொ­றுப்பை ஏற்­ற­வுடன் பிரி­வி­னைக்­கான பாதை­யினை மூடி­விட்டு ஒன்­றி­ணைந்த இலங்கை என்ற பாதை­யினை ஆரம்­பித்துக் கொடுத்தார். கடந்த பத்து ஆண்­டு­களில் இந்த நாட்டில் பாரிய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­மையை எவ­ராலும் மறுக்க முடி­யாது. 

ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியின் கீழ் எழு மாதங்­களே நாடு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. ஆனால் இந்த குறு­கிய காலப்­ப­கு­தியில் மீண்டும் பிரி­வி­னைக்­கான பாதை­யினை ஆரம்­பித்­துள்­ளனர். இவர்­க­ளது ஆட்­சியில் தமி­ழீ­ழத்­துக்­கான பாதை மீண்டும் திறக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் ஈழத்தை அமைத்துக் கொடுப்­ப­தற்­கான அடுத்­த­கட்ட நகர்வை நேற்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். அதா­வது இலங்­கையின் மீதான போர்க்­குற்ற விசா­ர­ணை­களை சர்­வ­தேச தலை­யீட்டில் முன்­னெ­டுக்க அனு­ம­திப்­பது இல்லை என்று அர­சாங்கம் கூறி­னாலும் உள்­ளக பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்­து­வ­தாக கூறி­யுள்­ளது. ஆனால் இந்த உள்­ளகப் பொறி­மு­றை­யினை வட­மா­காண சபை­யி­டமே அர­சாங்கம் ஒப்­டைக்­க­வுள்­ள­தென்ற ரக­சிய தக­வல்கள் எமக்கு கிடைத்­துள்­ளன. ஆகவே சர்­வ­தேச விசா­ர­ணையை விடவும் மோச­மான நிலைமை இப்­போது ஏற்­பட்­டுள்­ளது.

அதேபோல் நாட்டில் நல்­லாட்சி அமைய வேண்­டு­மாயின் மஹிந்த –மைத்­திரி கூட்­டணி அமைய வேண்டும். அதேபோல் இந்த நாட்டின் தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வும் எம்­மி­டமே உள்­ளது. இந்த நாட்டில் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் மனங்­களை வென்­றவர் மஹிந்த ராஜபக் ஷவே­யாகும். ஒட்­டு­மொத்த சிங்­கள மக்­களும் இன்று மஹிந்­தவின் தலை­மைத்­து­வத்தை விரும்­பு­கின்­றனர். அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம் மக்­களின் மனங்­களை வென்­றவர். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது இந்த நாட்டில் வாழும் சிறு­பான்மை மக்கள் அனை­வரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நம்பி வாக்­க­ளித்­தனர்.ஆகவே பிரச்­சி­னைக்­கான தீர்வு இப்­போது எமது அர­சாங்­கத்­தி­டமே உள்­ளது.

ஆனால் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம். தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாக கோரி வடக்­கையும் கிழக்­கையும் இணைத்தால் அதன் பின்னர் நாட்டில் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்­டி­வரும். இப்­போது வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க கோரு­ப­வர்கள் பின்னர் தனி­நாட்டை கோரு­வார்கள். ஆகவே இந்த நாட்டை பிரிக்க எந்த சக்­தி­க­ளுக்கும் இடம் கொடுக்க முடி­யாது.

கேள்வி :- ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­டணி சமஷ்­டியை எதிர்க்­கின்­றதா?

பதில் :- ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு சமஷ்­டியை எதிர்ப்­பதை விடவும் இந்த நாட்டை பிள­வு­ப­டுத்த ஒரு­போதும் தயா­ரில்லை என்­பது தான் எமது நிலைப்­பா­டாகும். ஆரம்­பத்தில் சமஷ்­டியை ஆத­ரித்த நிலைமை எமது பக்­கமும் இருந்­தது. ஆனால் 199௦ஆம் ஆண்­டு­களில் நாட்டின் நிலைமை முழு­மை­யாக மாறி­விட்­டது. குறிப்­பாக அதி­காரப் பகிர்வை முன்­வைத்து நாட்டை பிரிக்கும் நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

 சமஷ்டி நாட்டில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தும் முறைமை என்­பதை நாம் இப்­போது ஏற்கத் தயா­ராக இல்லை. சோவியத் குடி­ய­ரசு துண்டு துண்­டாக பிள­வு­பட்­டதும் ஏனைய ஒரு­சில நாடு­களில் பிரி­வி­னை­வாதம் உரு­வா­கவும் இந்த சமஷ்டி முறைமை தான் காரா­ண­மாக இருந்­தது. இப்­போது இருக்கும் நிலையில் வடக்­கையும் கிழக்­கையும் இணைத்த அதி­கா­ரப்­ப­கிர்வை நோக்கி சென்றால் தனி­நாட்­டினை கோரு­வதே இவர்­க­ளது அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­யாக அமையும்.

கேள்வி :- 13ற்கு அப்பால் சென்று அதி­காரப் பகிர்வை வழங்­கு­வ­தென்ற நிலைப்­பாட்டில் நீங்­களும் இருந்­தீர்­களே?

பதில் 13ற்கு அப்பால் சென்ற அதி­காரப் பகிர்வை பொறுத்­த­வ­ரையில் மாறு­பட்ட நிலைப்­பா­டு­களும் உள்­ளன. அதா­வது 13இல் இருக்கும் சில சரத்­துக்­களை நீக்­கி­விட்டு வேறு சில சரத்­துக்­களை உட்­பு­குத்தி 13ஐ நடை­மு­றைப்­ப­டுத்த முடியும். அல்­லது மக்­களின் கருத்­துக்கு அமைய செயற்­ப­டுத்த முடியும். இவற்றில் ஏதேனும் ஒரு முறையை கையாள்­வதே சரி­யா­னது என்ற நிலைப்­பாடே எம்­மிடம் இருந்­தது. ஆனால் என்ன முடி­வாக இருந்­தாலும் 13 க்கு உள்ளே தீர்வை காண்­பதே எமது நிலைப்­பா­டாகும். இதற்கு அப்பால் போவது தொடர்பில் சிந்­தித்துப் பார்க்­க­வேண்டும்.

கேள்வி :- உங்­களின் அர­சாங்­கத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்ன?

பதில் :- இலங்­கையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை எட்­டு­வதில் ஆரம்­பத்­தி­லேயே நாம் தவ­ரி­ழைத்­துள்ளோம். அப்­போதே அதி­கா­ரப்­ப­கிர்வை நோக்கி பய­ணித்­தி­ருந்தால் இன்று நாட்டில் குழப்­பங்கள் ஏற்­பட்­டி­ருக்­காது. ஆனால் அப்­போ­தி­ருந்தே பிர­தான இரு கட்­சிளும் இனப்­பி­ரச்­சி­னக்­கான தீர்வை காண்­பதில் அக்­கறை காட்­ட­வில்லை. ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்சி தயா­ராக இருந்த வேளையில் ஐக்­கிய தேசியக் கட்சி ஏதேனும் கார­ணங்­களை காட்டி தடுத்­த­மையும், ஐக்­கிய தேசியக் கட்சி முயற்சித்த போது எமது தரப்பினர் ஏதேனும் காரணங்களை காட்டி தடுத்தமையுயே நடந்தேறியது. 

எனினும் இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு என்பது சிக்கலான ஒன்றல்ல. ஆனால் இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களின் ஆதரவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும். இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு எந்த சிக்கலும் வராத வகையில் எதையும் செய்யமுடியும். எனவே எமது அரசாங்கத்தில் இனப்பிரச்சினைகான தீர்வு சாத்தியமானது. மஹிந்த –மைத்திரி தலைமையில் ஆறுமாத காலத்தில் இனப்பிரசினகனதீர்வை நாம் பெற்றுத்தருவோம். சாத்தியமான ஒன்றாகவே இதை கருதுகின்றோம் என்றார்.