Breaking News

ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமராக பதவியேற்பு

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்­றி­பெற்­றுள்ள நிலையில் அதன் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க இன்று புதிய அர­சாங்­கத்தின் பிர­த­ம­ராக பத­வி­யேற்­க­வுள்ளார் . ரணில் விக்­ர­ம­சிங்க இலங்­கையின் 16ஆவது பிர­த­ம­ரா­கவே பத­வி­யேற்­கின்றார்.

இன்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் ரணில் விக்­ர­ம­சிங்க 16 ஆவது

பிர­த­ம­ராக பத­வி­யேற்­க­வுள்ளார். இந்த நிகழ்வில் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள், வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இன்று காலை ஹுனு­பிட்டி கங்­கா­ராம விஹா­ரையில் சமய வழி­பா­டு­களில் ஈடு­ப­ட­வுள்ள பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அங்­கி­ருந்து ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்குச் சென்று புதிய பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­க­வுள்ளார். எனினும் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை யி­லான புதிய அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களும் இன்­றைய தினமே பத­வி­யேற்­பார்­களா என்­ப­தனை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை. எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை அமைச்­ச­ரவை பத­வி­யேற்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அர­சியல் கட்­சி­களின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் விப­ரங்கள் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­ப­துடன் வர்த்­த­மா­னி­யி்லும் வெளி­வ­ர­வில்லை. எனவே இன்­றைய தினமே அமைச்­சர்கள் பத­வி­யேற்­பது சாத்­தி­ய­மில்லை என்றும் கூறப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றெ­னினும் ஒரு­சில அமைச்­சர்கள் பத­வி­யேற்­கலாம் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

நடந்து முடிந்த தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி 106 ஆச­னங்­களை பெற்று வெற்­றி­பெற்­றது. தேர்­தலில் அறுதி பெறும்­பான்மை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைக்­க­வில்லை என்­றாலும் கூடிய ஆச­னங்­களை பெற்ற கட்சி என்ற ரீதியில் ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ளது.

சாதனை வெற்றி

இம்­முறை எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட ரணில் விக்­ர­ம­சிங்க 500566 விருப்பு வாக்­கு­களை பெற்று சாதனை படைத்­துள்ளார். இலங்கை அர­சி­யலை பொறுத்­த­வரை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பெற்ற அதி­கூ­டிய விருப்­பு­வாக்­கு­க­ளாக ரணில் விக்­ர­ம­சிங்க இம்­முறை பெற்ற விருப்பு வாக்­குகள் அமைந்­துள்­ளன. இதற்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷவும் கூடிய விருப்பு வாக்­கு­களை பெற்­றி­ருந்­தனர்.

ரணில் விக்­ர­ம­சிங்க இலங்­கையின் பிர­த­ம­ராக நான்­கா­வது தட­வை­யாக பத­வி­யேற்­க­வுள்ளார். அவர் இதற்கு முன்னர் 1993 2001 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் நாட்டின் பிர­த­ம­ராக பத­வி­யேற்­றி­ருந்தார். அந்­த­வ­கையில் இம்­முறை நான்­கா­வது தட­வை­யாக பிர­த­ம­ராக பத­வி­யேற்­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சவால்கள்

1977 ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக ரணில் விக்­ர­ம­சிங்க பிய­கம தொகு­தியில் இருந்து தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். 1977 ஆம் ஆண்­டி­லி­ருந்து ரணில் விக்­ர­ம­சிங்க ஒவ்­வொரு தேர்­தல்­க­ளிலும் வெற்­றி­பெற்றே வந்­துள்ளார்.

சர்­வ­தேச மட்­டத்­திலும் சிறந்த தொடர்­பு­களை கொண்­டுள்ள ரணில் விக்­ர­ம­சிங்க சிறந்த கல்­வி­மா­னா­கவும் தெற்­கா­சி­யாவில் மூத்த அர­சி­யல்­வா­தி­யா­கவும் கரு­தப்­ப­டு­கின்றார். கடந்த காலங்­களில் பல்­வேறு சவால்­க­ளையும் சந்­தித்த நிலை­யி­லேயே தற்­போது தேர்­தலில் வெற்­றி­பெற்­றுள்ளார்.

கடந்­த­காலம்

கடந்த 1994 ஆண்டு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக பொறுப்­பேற்றார். பின்னர் 2001 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்­சி­மைக்­கப்­பட்­ட­போது பிர­த­ம­ரானார். எனினும் அந்த அர­சாங்கம் 2004 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டதையடுத்து மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார். 2010 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னரும் எதிர்க்கட்சித் தலைவரானார்.

எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைததிரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் அப்போது மூன்றாவது தடவையாக அவர் பிரதமரானார். அந்தவகையில் தற்போது நான்காவது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.