Breaking News

ஊழல் செய்யவில்லை என்றால் ரணில் விவாதத்துக்கு வரவேண்டும்! சவால் விடுக்கிறார் டிலான் பெரேரா


இந்த ஆறு­மாத காலத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி ஊழல் செய்­ய­வில்லை என்றால் மக்­களின் நிதியை கொள்­ளை­ய­டிக்­க­வில்லை என்றால் தைரி­ய­மாக எங்­க­ளுடன் நேரடி விவா­தத்­துக்கு வர­வேண்டும். 

தைரியம் இருந்தால் எனது சவாலை ஏற்­றுக்­கொண்டு ரணில் விவா­தத்­துக்கு வர­வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பினர் டிலான் பெரேரா சவால் விடுத்தார். எம்மைக் கண்டு ஓடி ஒளி­ய­வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இந்­த­போதே டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஆட்­சியில் மஹிந்த கூட்­டணி ஊழல்கள் செய்­த­தா­கவும் எம்­மீது சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் எனவும் இந்த அர­சாங்­கத்தின் நல்­லாட்­சிக்­கா­ரர்கள் தெரி­வித்­தனர். ஆனால் இன்­று­வ­ரையில் எம்­மீது எந்­த­வொரு வழக்­கை­யேனும் தாக்கல் செய்ய முடி­ய­வில்லை. எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் இந்த ஆறு­மாத கால ஆட்­சியில் நடந்த ஊழல் மோச­டிகள் தொடர்பில் ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்க நாம் தயா­ராக உள்ளோம்.

மத்­திய வங்கி கொள்ளை தொடர்பில் இன்­று­வரை இவர்கள் உண்­மையை வெளிப்­ப­டுத்­த­வில்லை. மத்­திய வங்கி ஊழல் நடந்­தி­ருப்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஏற்­றுக்­கொண்­டுள்ளார். மத்­திய வங்கி ஊழல் விட­யத்தில் மத்­திய வங்கி ஆளு­நரை பத­வி­வி­லக்க பிர­த­ம­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­தாக அவர் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­துள்ளார். ஆகவே மத்­திய வங்கி விட­யத்தில் மிகப்­பெ­ரிய நிதி மோசடி நடை­பெற்­றி­ருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

அதேபோல் அதி­வேக நெடுஞ்­சாலை அபி­வி­ருத்தி என்ற பெயரில் மக்­களின் பணத்தை கொள்­ளை­ய­டிக்கும் வேலை­யினை ஐக்­கிய தேசியக் கட்சி ஆரம்­பித்­துள்­ளது. பல பில்­லியன் ரூபா கொள்­ளை­ய­டித்­துள்­ளனர். கொழும்பு –கண்டி அதி­வேக நெடுஞ்­சாலை அபி­வி­ருத்தி என்ற பெயரில் ஐநூறு பில்­லியன் ரூபா கொள்­ளை­ய­டித்­துள்­ளனர். அதேபோல் நாம் முடி­வுக்கு கொண்­டு­வந்த பாதாள உலக கோஷ்டி கலா­சா­ரத்தை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் மீண்டும் ஆரம்­பித்து வைத்­துள்­ளனர்.

ஆகவே இந்த விட­யங்கள் தொடர்பில் மக்கள் முன்­னி­லையில் விவா­திக்க நாம் தயா­ராக உள்ளோம். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் எம்­முடன் விவா­திக்க வர­வேண்டும். எம்மைக் கண்டு ஓடி ஒளிய வேண்டாம். ஐக்­கிய தேசியக் கட்சி ஊழல் செய்­ய­வில்லை என்றால் மக்களின் நிதியை இந்த ஆறுமாத காலத்தில் கொள்ளையடிக்கவில்லை என்றால் தைரியமாக எங்களுடன் நேரடி விவாதத்துக்கு வரவேண்டும். தைரியம் இருந்தால் எமது சவாலை ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.