Breaking News

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வதேச விசாரணை கோரப்படவில்லை - அனந்தி சசிதரன்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இன அழிப்­புக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ரணையை கோர­வில்­லை­யென வட­மா­காண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் விசனம் தெரி­வித்­துள்ளார்.

இதற்கு கூட்­ட­மைப்­பி­லுள்ள சிலரே காரணம் எனவும் அவர்­களை மக்கள் நிரா­க­ரிக்­க­வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது;

2013 இல் வட­மா­காண மக்கள் என்னை மாகா­ண­ச­பைக்கு அமோ­க­மான வாக்­குகள் மூலம் தெரிந்­தெ­டுத்­தார்கள். நீண்ட நெடிய போரில் என்­னைப்­போல இழப்­பு­க­ளுக்கு முகம்­கொ­டுத்த உற­வு­க­ளுக்­காக எனது தெரிவைப் பயன்­ப­டுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்­க­ளுக்கு முன்­கூட்­டியே வழங்­கி­யி­ருந்தேன். அது­மட்­டு­மல்ல, எனது கண­வ­ரான எழிலன் தனது தேசிய அர­சியல் கட­மையை எவ்­வ­ளவு பொறுப்­பு­ணர்வுடன் செய்தார் என்­ப­தையும் எமது மக்கள் அறிந்­தி­ருந்­தார்கள்.

மாவி­லாறில் போரை அர­சாங்கம் பெரும் எடுப்­புடன் ஆரம்­பிக்கும் இறு­திக்­கணம் வரை சர்­வ­தேச போர்­நி­றுத்தக் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளுடன் எழிலன் எவ்­வாறு ஒத்­து­ழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்­ப­தற்கு போர் நிறுத்தக் கண்­கா­ணிப்புக் குழுவின் தலை­வ­ராக இறு­தி­யாக இருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்ப் ஹென்­றிக்சன் போன்­ற­வர்­களே நேரடிச் சாட்­சியம்.

போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக அர­சாங்கம் மாற்­றி­ய­தற்கும், அந்தப் போரின் முடிவின் இறு­திக்­க­ணங்­களில் கூட காய­ம­டைந்­த­வர்­களைப் பரா­ம­ரித்­துக்­கொண்­டி­ருந்த எனது கணவர் எவ்­வாறு நடந்து­ கொண்டார்? அவ­ருக்கு நடந்­தது என்ன? எம்மைச் சுற்­றி­யி­ருந்த மக்­க­ளுக்கு நடந்­தது என்ன என்­ப­தற்கு நான் ஒரு சாட்­சி­ய­மாக எனது தேச மக்­க­ளுக்கு எனது கட­மையைச் செய்­வது என்ற நோக்­கத்­தோடு இன அழிப்­புக்­கெ­தி­ரான விசா­ர­ணையைச் சர்­வ­தேசம் மேற்­கொள்ள வேண்டும் என்ற வேண்­டு­கோளை ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன்­வைத்தேன்.

உண்­மையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்­பா­கவும், வட மாகாண சபை சார்­பா­கவும் முதன் முதலில் ஐ.நா. மனித உரிமை சபையில் நேர­டி­யாக இன அழிப்­புக்­கான சர்­வ­தேச விசா­ர­ணையை நான் கோரும் வரை வேறு எந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைச் சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரோ, மாகா­ண­சபை உறுப்­பி­னரோ அங்கு கலந்­து­கொண்டு அதைக் கோரி­யி­ருக்­க­வில்லை.

என்­னைக்­கூட இன அழிப்­புக்­கான சர்­வ­தேச விசா­ர­ணையைக் கோரக்­கூ­டாது என்று தடுக்­கப்­பட்­ட­மையை கடந்த வரு­டமே நான் ஊட­கங்­க­ளுக்கு அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருந்தேன்.

மாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அடி­கோ­லு­ப­வர்­க­ளாக சில உறுப்­பி­னர்கள் தொடர்ச்­சி­யாக உழைத்தோம். எமது உழைப்­பிற்கு மேலாக எதிர்­பா­ராத பல­னாக முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இந்த வரு­டத்தின் ஆரம்­ப­த்தில் நிறை­வேற்­றிய தீர்­மானம் ஒரு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது.

ஆனால், தற்­போது வெளி­யா­கி­யி­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இன அழிப்­புக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ரணை கோரப்­ப­ட­வில்லை. இது ஒரு அப்­பட்­ட­மான அநீதி என்­பதை எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக் கூடாக, மக்களின் அபிலாஷைகளை விளங்கிய நிலையில் கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை, வடமாகாணசபை ஏக மனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றுள்ளது.