யாகாவாராயினும் நாகாக்க - சிறிதரனுக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி!!
நல்லூர் செட்டித்தெருவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின்
பிரசாரக்கூட்டம் ஒன்றில் பேசிய வேட்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் தன்னை கைது செய்து தாக்கியதை விட அப்போதிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் தன்னைத்தாக்கியது தனக்கு இன்னும் வலித்துக்கொண்டிருப்பதாக ஓர் புதிய கதையை அவிழ்த்து விட்டு அனுதாபம்தேட முற்பட்டுள்ளார்.

2010ம் ஆண்டு தேர்தலின்போது இந்த வலியைப்பற்றி பொதுமக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் ஏன்; அவருக்கு ஏற்படவில்லை? அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக சுரேஸ்பிரேமச்சந்திரனுடைய பாராளுமன்ற வாசஸ்தலத்துற்குச் சென்று தேர்தலில் போட்டியிட தனக்கு ஓர் ஆசனம் வேண்டுமென்று கேட்டபோதும் ஏன் வலிக்கவில்லை?
தான் செய்தவற்றையும் செய்ய இருப்பதைப் பற்றியும் தனது கொள்கையையும் விபரித்து வாக்குகேட்க முடியாமல், விருப்பு வாக்கில் பின்தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கூட்டமைப்புக்குள்ளேயே சேறடிக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளார்.

குப்பி கடிக்காதவர்கள் போராளிகள் அல்ல என வவுனியாவில் அவர் பேசிய பேச்சொன்றை தான் அவ்வாறு பேசவில்லை அவ்வாறு பேசி இருந்தால் அதனை நிரூபிக்கும்படியும் சவால்விட்டிருந்தார். ஆனால் அவர் அப்படித்தான் பேசினார். இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடியாகவே பத்திரிகைகளுக்கு அறிவித்திருந்தனர்.

தேர்தலில் வாக்குச் சேகரிக்க இத்தகைய கீழ்த்தரமான வேலைகளில்கூட இவர் ஈடுபடுவார் என்பதை நினைக்கும்போது அவரது நேர்மையின்மீது சந்தேகம் வருகிறது.
கூட்டமைப்பின் ஓர் அங்கமான தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள்
அவதானமாகப் பேசுவது நல்லது என்பதை அக்கட்சியின் தலைவர்கள் புரிந்துகொண்டு வேட்பாளர்களுக்கு தகந்த ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
அவதானமாகப் பேசுவது நல்லது என்பதை அக்கட்சியின் தலைவர்கள் புரிந்துகொண்டு வேட்பாளர்களுக்கு தகந்த ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
ந.சிவசக்தி ஆனந்தன்.
பொதுச்செயலாளர்,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
03.08.2015
தொடர்புள்ள செய்திகள்