Breaking News

சர்­வ­தேச விசா­ர­ணையே தமிழ் மக்­க­ளுக்கு நீதியை வழங்கும் - சிறி­தரன்

சர்­வ­தேச விசா­ர­ணையே தமிழ் மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்­பது தான் எமது முடிந்த முடிவு என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் தெரி­வித்­துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மக்கள் எமக்கு வழங்­கிய ஆணைக்கு ஒரு­போதும் துரோகம் இழைக்கும் வகையில் செயற்­ப­ட­மாட்டோம். அதன் அடிப்­ப­டையில் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

தேர்தல் காலங்­க­ளிலும் நாங்கள் கூறி­யி­ருந்தோம் சர்­வ­தேச தரத்­தி­லா­னதும் தமிழ் மக்கள் நம்பக் கூடிய வகை­யிலும் சர்­வ­தேச விசா­ரணை அமை­ய­வேண்டும் என்று. அந்த விட­யத்தில் நாங்கள் தெளி­வாக இருக்­கிறோம்.

மேலும் இலங்­கைக்கு ஒரு நல்­லெண்­ணத்­தையும் நல்­லாட்­சிக்­கான கால ஓட்­டத்­தையும் வழங்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா சில விட­யங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இலங்­கை­யிலே ஒரு நீதி­யான விசா­ரணை நடை­பெறும் என்ற எண்­ணத்­துடன் அமெ­ரிக்கா இந்த பிரே­ர­ணையில் சில மாற்­றங்­களை மேற்­கொள்ளும் என்ற ஊகங்­களே வெளி­வந்­துள்­ளன.

ஆனால் எங்­களை பொறுத்­த­வ­ரையில் அறிக்கை முழு­மை­யாக வெளி­வந்­ததன் பின்­னரே அதிலே என்­னென்ன கூறப்­பட்­டுள்­ளன. என்­னென்ன கையா­ளப்­பட்­டுள்­ளது மற்றும் அதன் நன்­மை­யென்ன தீமை­யென்ன என்ற விட­யங்­களை பேச­மு­டியும்.

மேலும் அமெ­ரிக்கா ஏமாற்­றாது என்றும் உலகம் எங்­களைக் கைவி­டாது என்ற நம்­பிக்­கை­யையும் தமிழ் மக்கள் மனதில் வைத்­துள்­ளனர்.

இப்­பி­ரே­ர­ணையை அமெ­ரிக்கா என்ற உலக வல்­ல­ரசு கொண்டு வந்­த­தனால் அதற்கு ஒரு கன­தியும் காத்­தி­ரமும் கிடைத்­தி­ருக்­கின்­றது. எனவே அந்­நா­டு­க­ளு­டைய செயற்­பா­டு­களை மைய­மாகக் கொண்­டுதான் எமது வேலைத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

அத்­துடன் அவர்கள் தமது நலன்­சார்ந்த சில விட­யங்­களை இதற்குள் புகுத்தி கொண்­டாலும் அதனை அனு­ச­ரித்து போக­வேண்­டிய தேவையும் எமக்­குண்டு. அதே­நேரம் அவர்கள் சொல்­லு­கின்ற விட­யங்கள் எல்­லா­வற்­றுக்கும் நாங்கள் தலை­யாட்ட வேண்­டி­ய­தில்லை.

நாங்­களும் எங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக கூறுகின்றபோது அவர்கள் அந்த விடயங்களிலும் சரியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். அதற்குரிய அழுத்தத்தையும் உண்மைகளையும் அவர்க ளுக்கு சொல்லவேண்டும் என்றார்.