Breaking News

அமைச்­ச­ரவை அதி­க­ரிப்­புக்கு அங்­கீ­காரம்பெற பிரே­ரணை பிர­தமர் சமர்ப்­பிப்பார்: ஜே.வி.பி. எதிர்க்கும்

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தான பங்­கா­ளி­யு­மான ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியும் இணைந்து ,

தேசிய அர­சாங்கம் ஒன்றை நிறு­வு­வ­தற்­கான முஸ்­தீ­புகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அமையப் பெற­வி­ருக்­கின்ற தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்துக்கொள்­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெறு­வ­தற்­கான பிரே­ரணை ஒன்று இன்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அமைச்­ச­ர­வையின் அமைச்­சுக்­களின் எண்­ணிக்கை அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் 19 ஆவது திருத்­தத்­திற்கு அமை­வா­கவே அமைந்­தி­ருத்தல் வேண்டும் என்றும் அதனை அதி­க­ரிக்க முயல்­வது அர­சியல் அமைப்புச் சட்­டத்தை மீறு­கின்ற செயற்­பாடு என்றும் ஜே.வி.பி. கடு­மை­யான எதிர்ப்­பினை தெரி­வித்து வரு­கின்ற நிலை­யி­லேயே இன்று பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை சமர்­பித்து அமைச்­ச­ர­வையின் எண்­ணி­க­கையை அதி­க­ரிப்­ப­தற்­கான அங்­கீ­கா­ரத்தை பெறு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்­டுள்­ளன.

இதன்­படி அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்­கான பிரே­ர­ணையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­க­வுள்ளார். பிர­த­மரால் சமர்­பிக்­கப்­ப­டு­கின்ற பிரே­ர­ணை­யா­னது விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு பின்னர் வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­பட்டு தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தான பங்­கா­ளி­யு­மான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை நிறு­வு­வ­தென தீர்­மா­னித்­தி­ருக்­கின்ற நிலையில் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கை­யினை அதி­க­ரிப்­ப­தற்கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதன்­படி அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சுக்­களின் எண்­ணிக்­கையை 45 ஆக உயர்த்­து­வ­தற்கும் இவ் எண்­ணிக்­கையை அர­சாங்கம் அமைக்கும் இரு தரப்­பி­னரும் பகிர்ந்து கொள்­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே அமைச்­ச­ரவை அதி­க­ரிப்­பற்கு ஜே.வி.பி. எதிர்ப்­பினை வெ ளியிட்­டுள்­ளது. அது­மாத்­தி­ர­மின்றி இவ் விவ­காரம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும் என்றும் கோரி­யுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் 19 ஆவது திருத்­தத்தின் பிர­காரம் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கை­யா­னது 30 க்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருத்தல் வேண்டும் என்றும் தேசிய அர­சாங்கம் ஒன்று நிறு­வப்­படும் சந்­தர்ப்­பத்தில் அமைச்­ச­ரவை எண்­ணிக்­கையை அதி­க­ரித்துக் கொள்ளும் தேவை ஏற்­பட்டால் அது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தை பெறுதல் வேண்டும் என தெளி­வாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதன் அடிப்­ப­டை­யிலும் ஜே.வி.பியின் கோரிக்­கை­யினை ஏற்றுக் கொள்ளும் வகை­யிலும் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்துக் கொள்­வது தொடர்­பான பிரே­ர­ணையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

இப் பிரே­ர­ணை­யா­னது பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் விவா­தத்ற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­ட­வுள்­ளது. இவ் வாக்­கெ­டுப்பின் போது ஜே.வி.பி. எதிர்த்து வாக்­க­ளிக்­க­வுள்ள அதே­வேளை பாரா­ளு­மன்­றத்தில் எதிர் தரப்­பி­ன­ராக செயற்­ப­ட­வுள்­ள­தாக கூறி­யுள்ள ஐ.ம.சு.மு.வின் மாற்றுத் தரப்­பி­னரின் தீர்­மானம் என்­ன­வென்று அறி­விக்­கப்­ப­ட­வில்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

கூட்டு அர­சாங்­கமே என்­கி­றது ஜே.வி.பி.

அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளதன் பிர­காரம் தேசிய அர­சாங்கம் ஒன்று அமையும் பட்­சத்­தி­லேயே அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்­கான சாத்­தியக் கூறுகள் உள்ளதாகவும் தற்போது அமையப் பெறுகின்ற அரசாங்கமானது இரண்டு கட்சிகளால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள கூட்டு அரசாங்கமே தவிற அதில் தேசிய அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட முடியாதது என்றும் கூறியுள்ளது. 

மேலும் தேசிய அரசாங்கம் அல்லாத கூட்டு அரசாங்கத்தில் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க சட்டத்தின் பிரகாரம் இடமில்லை என்ற வாதத்தையும் ஜே.வி.பி. முன்வைத்துள்ளது. இதனடிப்டையிலேயே தாம் அமைச்சரவை அதிகரிப்பினை தாம் எதிர்ப்பதாகவும் அக் கட்சி கூறியுள்ளது.