Breaking News

சர்­வ­தேச விசா­ரணை விட­யத்தில் முரண்­பட்­டுள்ள கூட்­ட­மைப்­பினர்

இறுதி யுத்­தத்தின் போது இடம்பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று பல்­வேறு தரப்­பி­னரும் கடந்த சில வரு­டங்­க­ளா­கவே கோரி வரும் நிலையில் தற்­போது அந்த சர்­வ­தேச விசா­ரணை தேவை­யில்­லை­யென்றும் உள்­ளக விசா­ர­ணையின் மூலம் இந்த விட­யத்­திற்கு தீர்வு காணலாம் என்ற கருத்து மேலோங்கி வரு­கின்­றது.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்­தத்தின் போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். உயிர்­க­ளையும், உடை­மை­க­ளையும் இழந்த மக்கள் இடம்பெயர்ந்து அக­தி­க­ளாக அல்­லல்­பட்­டனர். பெரு­ம­ள­வானோர் காணாமல் போயினர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­டனர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெண்கள் வித­வை­க­ளா­யினர். இவ்­வாறு தமிழ் மக்கள் பெரும் இன்­னல்­களை சந்­தித்­தி­ருந்­தனர். மூன்று இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட மக்கள் இடம் பெயர்ந்து பல மாதங்­க­ளாக அகதி முகாம்­களில் அல்­லல்­பட்­டனர்.

இவ்­வாறு அவ­லப்­பட்ட தமிழ் மக்கள் தமக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற மன நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றனர். யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் யுத்த பிர­தே­சங்­களை பார்­வை­யிட்டு அதிர்ச்சி தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு அர­சாங்கம் பொறுப்­புக்­கூறும் செயற்­பாட்டினை மேற்­கொள்­ள­வேண்­டு­மென்றும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், அன்­றைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறும் செயற்­பாட்­டி­லி­ருந்து தவ­றி­ய­மை­யினால் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் 2012 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா பிரே­ரணை கொண்­டு­வந்­தது. அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு, 2014 ஆம் ஆண்டு தொடர்ச்­சி­யாக பிரே­ர­ணைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டு சர்­வதேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்ற தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்­கி­ணங்க ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு விசா­ர­ணை­க­ளையும் மேற்­கொண்டு கடந்த மார்ச் மாதம் அந்த அறிக்­கையை சமர்ப்­பிக்­க­விருந்தது. ஆனால், இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு இணங்க விசா­ரணை அறிக்கை செப்­டெம்பர் மாதம் வரையில் பிற்­போ­டப்­பட்­டி­ருந்­தது.

இம்­மாதம் 30 ஆம் திகதி இந்த அறிக்கை வெளி­வ­ர­வி­ருக்­கி­றது. புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்­தாது உள்­ளக விசா­ர­ணைக்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா உட்­பட மேற்­கு­லக நாடுகள் தற்­போது தீர்­மா­னித்­துள்­ளன. இதற்­கி­ணங்க இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக ஐ.நா. மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்கா பிரே­ரணை ஒன்­றினை இம்­முறை சமர்ப்­பிக்­க­வுள்ளது.

இந்த நிலையில் சர்­வ­தேச விசா­ரணை வேண்­டு­மென்று இது­வரை கோரி­வந்த தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் தற்­போது அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து சற்று மாறி­யுள்­ள­தா­கவே தெரி­கின்­றது. கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்கள் இவ்­வி­டயம் தொடர்பில் ஒவ்­வொரு நாளும் வெவ்­வேறு கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி சர்­வ­தேச விசா­ரணை தேவை­யில்லை என்ற நிலைப்­பாட்டில் உள்­ள­தா­கவே தெரி­விக்­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்­சி­க­ளான ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஆகி­யன சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். உள்­ளக விசா­ர­ணையின் மூலம் எது­வித நன்­மையும் கிடைக்­கப்­போ­வ­தில்லை என்­பதில் ஆணித்­த­ர­மாக கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றன.

இந்த மூன்று கட்­சி­களின் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு கடி­த­மொன்­றையும் அனுப்பி வைத்­துள்­ளனர். அந்தக் கடி­தத்தில் இலங்கை அர­சாங்­கத்தின் உள்­ளக விசா­ரணை மீது தமக்கு நம்­பிக்கை இல்­லை­யென்றும் எனவே யுத்தக் குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணையே நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று இவர்கள் கோரி­யுள்­ளனர்.

இதேபோல் வட­மா­காண சபையின் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்­டு­மென்­பதில் ஆணித்­த­ர­மாக உள்ளார். கடந்த வாரம் வட­மா­கா­ண­ச­பையில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற பிரே­ரணை ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் இடம்பெற்ற படு­கொ­லைகள் தொடர்பில் வட­மா­காண சபையில் கொண்­டு­வ­ரப்­பட்ட இன அழிப்பு பிரே­ரணை மற்றும் சர்­வ­தேச விசா­ரணை பிரே­ரணை என்­ப­வற்றின் பிர­திகள் வட­மா­காண முத­ல­மைச்­சரின் உறு­திப்­ப­டுத்­த­லுடன் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் பங்­கு­பற்றும் நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு விநி­யோ­கிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டிருக்­கின்­றது.

இந்­த­ள­விற்கு சர்­வ­தேச விசா­ரணை வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் இருந்து வரு­கின்றார். சர்­வ­தேச விசா­ரணை தொடர்பில் கூட்­ட­மைப்­பினர் இவ்­வாறு முரண்­பட்டு நிற்­ப­தா­னது தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை மலி­னப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா எக்ஸ்­பிரஸ் செய்­திச்­சே­வைக்கு கருத்து தெரி­விக்­கையில் இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை பேர­வை­யினால் நடத்­தப்­பட்ட விசா­ர­ணைகள் மூலம் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட போர்க்­குற்ற வழக்­கு­களை சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் விசா­ரணை செய்­வ­தற்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு விரும்­பு­வ­தா­கவும், மற்­றொரு சர்­வ­தேச விசா­ர­ணையை கூட்­ட­மைப்பு நாட­வில்­லை­யென்றும் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதேபோல் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் இவ்­விடயம் குறித்து கருத்து தெரி­விக்­கையில் சர்­வ­தேச தலை­யீட்டில் இலங்­கையின் போர்க்­குற்­ற­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். இந்த நிலைப்­பாட்டில் எது­வித மாற்­றமும் இல்லை என்று கூறி­யுள்ளார்.

இவ்­வி­டயம் குறித்து கருத்து தெரி­வித்­துள்ள தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் இலங்கை அர­சாங்­கத்தால் இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து உள்­ளக விசா­ர­ணை­களும், உண்­மைத்­தன்­மை­யற்­ற­வை­யா­கவே இருந்­துள்­ளன. எனவே, சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை நடத்­த­வேண்­டு­மென்று கோரும் உரிமை மக்­க­ளுக்கு உண்டு என்று கூறி­யுள்ளார்.

தமி­ழ­ர­சுக்­கட்­சியை சேர்ந்த இரா. சம்­பந்தன், மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் ஏற்­க­னவே சர்­வ­தேச விசா­ரணை முடிந்­து­விட்­டது போன்றும், இனிமேல் சர்­வ­தேச தலை­யீட்டில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­படல் வேண்டும் என்ற தொனிப்­பொ­ருளிலுமே கருத்­துக்களை தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால், கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்­சிகள் எதிர்­கா­லத்­திலும் சர்­வ­தே­ச­ வி­சா­ர­ணையே நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் கோரி­வ­ரு­கின்­றன. இந்த கோரிக்­கைக்கு வலுச்­சேர்க்கும் வகையில் கையெ­ழுத்துப் போராட்­டங்­களும் இடம் பெற்று வரு­கின்­றன.

இத­னை­விட சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி இன்று முதல் பாத­யாத்­திரை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. கிளி­நொச்­சி­யி­லி­ருந்து யாழ்ப்பாணம் நோக்கி இந்த பாதயாத்திரை இடம்பெறும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கின்றார்.

யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு சர்வதேச விசாரணையே சிறந்தது என்று இதுவரை கோரி வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போது இந்த விடயத்தில் முரண்பட்டுள்ளமை கவலையளிக்கும் விடயமேயாகும். எனவே இவ்விவகாரத்தில் இனியும் முரண்பாடுகளை அதிகரிக்காது ஒருமித்த செயற்பாட்டிற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைமைகள் முன்வரவேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டமைப்பினர் செயற்படவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்